திருமணத்துக்குப் பிறகும் தொல்லை; குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணை சீரழித்த சாமியார் கைது

2 mins read
e5daaa5a-30fa-4d98-82b2-f85fb4bc343e
-

சென்னை: பாலி­யல் புகா­ரில் சிக்­கிய மேலும் ஒரு போலி சாமி­யா­ரை­யும் அவ­ருக்கு உடந்­தை­யாக இருந்த மனை­வி­யை­யும் சென்னை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

சென்னை புற­ந­க­ரில் உள்ள புழல் பகு­தி­யைச் சேர்ந்த 48 வய­தான சங்­கர நாரா­ய­ண­ன் என்ற அந்த ஆட­வர், அதே பகு­தி­யில் ஆசி­ர­மம் நடத்தி வரு­கி­றார். அவ­ரது மனைவி புஷ்­ப­லதா (43 வயது) ஆசி­ர­மப் பணி­க­ளைக் கவ­னித்து வந்­தார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு இளம்­பெண் ஒரு­வர் தனது தாயாரு­டன் ஆசி­ர­மத்­துக்கு வந்து சென்­ற­போது அவ­ருக்­கும் சங்­கர நாரா­ய­ண னுக்கும் ­அறி­மு­கம் கிடைத்­துள்­ளது.

அதன் பிறகு ஒரு­முறை ஆசிரமத்­துக்குத் தனி­யாக வந்­த­போது, குளிர்­பா­னத்­தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, அப்­பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்படுத்தி உள்­ளார் சங்­கர நாரா­ய­ணன். இதற்கு அவ­ரது மனை­வி­யும் உடந்­தை­யாக இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் கடந்த 2018ஆம் ஆண்டு அந்­தப் பெண்­ணுக்குத் திரு­ம­ண­மா­ன­தும் கண­வர் வெளி­நாட்­டில் வேலை பார்ப்­ப­தும் சங்­கர நாரா­ய­ண­னுக்­குத் தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து அந்­தப் பெண்ணை மிரட்டி மீண்­டும் ஆசி­ர­மத்­துக்கு வர­வ­ழைத்­துள்­ளார். தாம் சொல்­வதைக் கேட்­கா­விட்­டால் அந்­தப் பெண்­ணு­டன் சம்­பந்­தப்­பட்ட அந்­த­ரங்கப் படங்­களை இணை­யத்­தில் வெளி­யி­டப்போவ­தாக மிரட்­டல் விடுக்­கவே, அந்­தப் பெண் வேறு வழி­யின்றி அவ­ரது ஆசைக்கு இணங்கி உள்­ளார்.

இந்­நி­லை­யில் அவர் கர்ப்­ப­ம் அடைந்து ஒரு குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த நிலை­யி­லும் சங்கர நாரா­ய­ணன் அப்­பெண்ணை விடுவதாக இல்லை. மீண்­டும் பல­முறை தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்டு தம்மைப் பார்க்க வரு­மாறு அவர் மிரட்­டல் விடுத்­த­தா­கத் தெரி­கிறது. இத­னால் ஆவே­ச­ம­டைந்த அந்­தப் பெண், காவல்­து­றை­யின் மகளிர் பிரி­வில் புகார் செய்ய, பெண் ஆய்­வா­ளர் கண்­ணகி வழக்­குப்­ப­திவு செய்து, உட­ன­டி­யாக சங்­கர நாரா­ய­ண­னை­யும் அவ­ரது மனை­வி­யும் கைது செய்­துள்­ளார்.