நடத்துநருக்கு கத்திக்குத்து; இருவர் கைது

நடத்துநருக்கு கத்திக்குத்து; இருவர் கைது

1 mins read
45d6035e-1e06-4ad1-be7a-fafbdbd9f6a8
கோவை அரசு மருத்துவமனையில் கத்திக்குத்து காயங்களுக்காக சிகிச்சை பெறும் நடத்துநர் கவியரசன். படம்: தமிழக ஊடகம் -

கோவை: தாங்­கள் சொல்­லும் இடத்­திற்கு அர­சுப் பேருந்தை இயக்­கா­த­ ­தால், ஆத்­தி­ர­ம­டைந்த மூன்று இளை­யர்­கள் நடத்­து­ந­ரைக் கத்­தி­யால் குத்­தி­னர். அவர் தற்­போது மருத்­து­வ­ம­னை­யில் சிசிச்சை பெற்று வரு­கி­றார்.

குற்­றத்­தில் ஈடு­பட்ட இளை­யர்­க­ளைக் கைது செய்­யா­வி­டில் பேருந்­து­களை இயக்­க­மாட்­டோம் என்று இதர பேருந்து நடத்­து­நர்­களும் ஓட்­டு­நர்­களும் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், நடத்துநரை கத்­தி­யால் குத்­திய அஜித், 24, இரு­கூரைச் சேர்ந்த சூர்யா, 19, ஆகிய இருவரை சிங்­கா­நல்­லூர் காவல்துறையினர் கைது செய்­த­னர். நீலிக்­கோ­ணாம்­பா­ளை­யத்தைச் சேர்ந்த மனோஜ், 23, என்­ப­வரைத் தேடி­வ­ரு­கின்­ற­னர்.

கோவை மாவட்டம், சிங்­கா­நல்­லுா­ரில் இருந்து அர­சுப் பேருந்து ஒன்று நேற்று முன்­தி­னம் இரவு பய­ணத்தை முடித்­து­விட்டு பேருந்­து­களை நிறுத்­தி­வைக்­கும் ஒண்­டிப்­பு­துார் 'டெப்போ'வை நோக்­கிச் சென்றுகொண்­டி­ருந்­தது.

அதில், ஓட்­டு­நர் முரு­க­வேல், 40, நடத்­து­நர் கவி­ய­ர­சன், 34, ஆகி­யோர் மட்­டுமே இருந்­த­னர்.

அப்போது, வழி­யில் மூன்று இளையர்கள் பேருந்­தில் ஏறி­னர். குடி­போ­தை­யில் இருந்த அவர்கள், நடத்துந­ரி­டம் பேருந்தை சூலூருக்கு ஓட்டும்படி மிரட்­டி­னர்.

இதற்கு மறுத்த நடத்­து­ந­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்டு, அவரை சர­மா­ரி­யாக கத்­தி­யால் கீறி­விட்டு, பேருந்­தின் பக்­க­வாட்டு கண் ணாடியை உடைத்­துக்­கொண்டு தப்­பி­யோ­டி­னர்.

நடத்­து­நரை ஓட்டுநர் மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தார்.

இதைத்­தொ­டர்ந்து ஒண்­டிப்­பு­தூர் டெப்­போ­வில் உள்ள அர­சுப் பேருந்து ஓட்­டு­நர்­களும் நடத்­து­நர்­களும் கத்­தி­யால் குத்­திய வாலி­பர்­களைக் கைது செய்­யும்வரை ேபருந்­து­களை இயக்கமாட்­டோம் என போராட்­டத்தில் ஈடுபட்டனர்.