சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 14 புதிய இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நேற்று மீண்டும் சோதனையை முடுக்கிவிட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்கள், சேலம் மாவட்டத்தில் ஓரிடம் என மொத்தம் 14 இடங்களில் இந்தச் சோதனைகள் தொடர்வதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
கடந்த 15ஆம் தேதி அன்று தங்கமணிக்கும் அவரது உறவினர் களுக்கும் சொந்தமான 69 இடங்களில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் நேற்று தங்களது சோதனை யைத் தொடர்ந்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறினர்.
கடந்தமுறை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.16 கோடி பணம், 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியிருந்தனர்.
ஆனால், இதனை மறுத்திருந்த தங்கமணி, "என் வீட்டிலிருந்து ஒரு கைபேசியைத் தவிர வேறு எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. இரண்டு கோடி ரூபாய், ஒரு கிலோ தங்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை," என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் இச்சோதனை நடவடிக்கைகள் ெதாடர்ந்தன.
கடந்த ஐந்தாண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து குவித்ததாக தங்க மணி மீதும் அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக பொறுப்பேற்றது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், கே சி வீரமணி, எம்ஆர் விஜயபாஸ்கரை அடுத்து ஐந்தாவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பிடியில் சிக்கியுள்ளார் தங்கமணி.

