ஒன்பது மாதத்துக்குப் பிறகு அருவியில் குளிக்க அனுமதி

ஒன்பது மாதத்துக்குப் பிறகு அருவியில் குளிக்க அனுமதி

1 mins read
f107255b-dbeb-4c47-aa63-0c9cd9f180af
-

தென்­காசி: ஒன்­பது மாதங்­க­ளுக்­குப் பிறகு குற்­றால அரு­வி­களில் குளிப்­ப­தற்கு நேற்று முதல் அனு­மதி அளிக்­கப்­பட்­ட­தால் சுற்­றுப் பய­ணி­கள், வியா­பா­ரி­கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்­த­னர்.

கொரோனா கிரு­மிப்­ப­ர­வல் கார­ண­மா­க­வும் வெள்­ளப் பெருக்­கின் கார­ண­மா­க­வும் கடந்த எட்டு மாதங்­க­ளாக சுற்­றுப்பய­ணி­கள் அனு­ம­திக்­கப்­ப­டா­மல் இருந்­த­னர். இந்­நி­லை­யில், இப்­போது கிரு­மிப் பர­வல் ஒரு கட்­டுக்­குள் வந்­துள்­ளதை அடுத்து காலை 6 முதல் மாலை 6 மணி வரை குளிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது மாவட்ட நிர்­வா­கம்.

தென்­காசி மாவட்­டத்­தில் உள்ள பேர­ருவி, ஐந்­த­ருவி, மெயின் அருவி, பழைய குற்­றால அருவி, புலி­ய­ருவி உள்­ளிட்­ட­வற்­றில் இனி சுற்­றுப்பய­ணி­கள் குளிக்­க­லாம். ஆனால், அரு­வி­யில் குளிக்க வரு­வோ­ரி­டம் இரண்டு தவணை தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்­ட­தற்­கான சான்­றி­தழ் இருத்­தல் அவ­சி­யம் என மாவட்ட நிர்­வா­கம் அறி­வித்­துள்ள நிலை­யில், பய­ணி­கள் கூட்­டம் அலை­மோ­து­வ­தாக தக­வல்.