அதிமுக நிர்வாகிகள் மோதல்: 10 பேர் காயம்

அதிமுக நிர்வாகிகள் மோதல்: 10 பேர் காயம்

1 mins read
20d4348b-a122-468f-86b7-a5f31ff61af2
-

கட­லூர்: கட­லூர் மாவட்­டத்­தில் உள்­கட்­சித் தேர்­தல் ஆலோச­னைக் கூட்­டம் நடந்துகொண்டிருந்த போது, அதி­முக நிர்­வா­கி­களுக்குள் மோதல் ஏற்பட்டதில் பத்­துக்­கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

ஒரு அணி­யி­னர் மற்­றொரு அணி­யி­ன­ரின் கார் கண்­ணா­டியை அடித்து நொறுக்­கி­னர்.

இதையடுத்து, அங்கு வந்த திருப்­பா­தி­ரிப்புலி­யூர் காவல்துறை­யி­னர் இரு­த­ரப்­பி­ன­ரை­யும் சமா­தா­னப்­ப­டுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்­த­னர்.

இருப்பினும், அங்கு தொடர்ந்து பதற்­றம் நில­வு­வ­தால், அதி­முக கட்சி அலு­வ­ல­கத்தின் முன்புறம் காவல்துறையினர் பாது­காப்­புக்­காக குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கட­லூரில் அதி­முக இரண்­டாம் கட்ட அமைப்­புத் தேர்­தல் இன்­றும் நாளை­யும் நடை­பெற உள்­ளது.

இந்நிலையில், உள்­கட்­சித் தேர்­தல் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம், கட­லூர், பாதி­ரிக்­குப்­பத்­தில் நடை­பெற்­றது.

அப்போது, மாவட்ட எம்­ஜி­ஆர் மன்­றச் செய­லா­ளர் சேவல்­கு­மார், கட்சி நிர்­வா­கி­க­ளுக்கு தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான விண்­ணப்­பப் படி­வத்தை வழங்­கி­யுள்ளார்.

இதையடுத்து, அங்கு வந்த நகர துணைச் செய­லா­ளர் கந்­த­னுக்­கும் சேவல்­கு­மா­ருக்­கும் இடையே வாய்த்­த­க­ராறு ஏற்­பட்­டுள்­ளது.

இதையறிந்த கட­லூர் வடக்கு மாவட்டச் செய­லா­ளர் எம்.சி.சம்­பத் விரைந்து சென்று இரு­வ­ரை­யும் சமா­தா­னப்­ப­டுத்­தி­னார். கூட்­டம் முடிந்­து சேவல்­கு­மார் காரில் புறப்­பட்­ட போது, அவரது காரை கந்­தன் ஆத­ர­வா­ளர்­கள் அடித்து நொறுக்­கி­னர். இதில் கார் கண்­ணாடி உடைந்­தது. இதையடுத்து இருதரப்பு ஆதர வாளர்களும் மோதிக்கொண்டதில் பலர் காயம் அடைந்தனர்.