சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் முதியோர் நலன் கருதி பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அடையாறு காவல்நிலைய அதிகாரிகளும் காவலாளர்களும் கலந்துகொண்ட முதியோரை பேணுவோம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அடையாறு சரக உதவி ஆணையாளர் நெல்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி எலியட்ஸ் கடற்கரையில் தொடங்கி பேசன் நகர் அவென்யூ, எல் பி ரோடு, இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் வழியாக சென்று காந்திநகரில் முடிவுற்றது.
படம்: தமிழக ஊடகம்

