புதுக்கோட்டை: எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கைது செய்திருப்பது தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளது மீனவக் கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்களுடன் புதுக்கோட்டை மீனவா்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்களையும் எட்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறைபிடித்தனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அைமச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசியபோது, 55 மீனவர்களையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜெய்சங்கரும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

