கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

1 mins read
7047191b-fccc-48a7-b632-38f7f1e08739
50 ஆண்டுகள் கருணாநிதியின் உதவியாளராகப் பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். இவர்,கரு­ணா­நி­தி­யின் நிழல் என்றே அர­சி­யல் வட்­டா­ரத்­தில் அழைக்­கப்­பட்டவர். படம்: ஊடகம் -

சென்னை: மறைந்த முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் நேர்­முக உத­வி­யா­ள­ராக இருந்த கோ. சண்­மு­க­நா­தன் கால­மா­னார்.அவ­ருக்கு வயது 80.

உடல்­ந­ல­மின்றி சென்னை காவேரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த சண்­மு­க­நா­தன் நேற்று மாலை உயி­ரி­ழந்­தார்.

1967ஆம் ஆண்டு முதல் கரு­ணா­நி­தி­யின் கடை­சிக்­கா­லம் வரை 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் உத­வி­யா­ள­ராக இருந்­த­வர்.

கரு­ணா­நிதி எழு­திய 'நெஞ்­சுக்கு நீதி' போன்ற புத்­த­கங்­களை எழுத்­து­பூர்­வ­மாக கொண்­டு­வந்­த­தில் முக்­கிய பங்­காற்­றி­ய­வர்.

ஒரு­முறை கரு­ணா­நிதி பேசியபோது, "சண்­முகநாதன் என் அலு­வ­ல­கத்­தில் வேலை­பார்ப்­ப­வர் என்­ப­தை­விட, என் அகத்­தில் இருந்து பணியாற்­று­ப­வர். சம்­பளத்­துக்­காக வந்­த­வர் அல்ல. இந்த இயக்­கத்­தில் தன்னை ஒப்­ப­டைத்­துக்­கொள்­ளும் அள­வுக்கு என்­னோடு கலந்துவிட்­ட­வர்," என உருக்­க­மா­கக் கூறி­யி­ருந்­தார்.

சண்­மு­க­நா­த­னின் மர­ணம் திமு­க­வி­னர் மத்­தி­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கோவை சென்­றுள்ள முதல்­வர் மு.க.ஸ்டா­லின், சென்னை திரும்­பி­ய­வு­டன் அஞ்­சலி செலுத்த உள்­ளதாகத் தகவல்.