ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

2 mins read
daf27229-b9d6-4fc2-9286-c8b9d9efcc86
மீனவர்களையும் படகுகளையும் மீட்காதவரை போராட்டம் தொடரும் என ராமேசுவரம் மீனவர்கள் கூறியுள்ளனர். நேற்று தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஊடகம் -

இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்து

ராமே­சு­வரம்: இலங்கை கடற்­ப­டை­யால் சிறை­பி­டிக்­கப்­பட்ட தமி­ழக மீன­வர்­களை விடு­விக்­கக் கோரி ராமே­சு­வ­ரம் மீன­வர்­கள் இரண்­டா­வது நாளாக நேற்று வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மீன­வர்­கள் விடு­விக்­கப்­படும் வரை தங்­க­ளது கால­வ­ரை­யற்ற வேலை நிறுத்­த­மும் உண்­ணா­வி­ர­தப் போராட்­ட­மும் நீடிக்­கும் என அவர்­கள் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர்.

சில தினங்­க­ளுக்கு முன்பு கட­லில் மீன்­பி­டித்­துக்கொண்­டி­ருந்த ராமே­சு­வ­ரம், மண்­ட­பம் பகு­தி­யைச் சேர்ந்த 55 மீன­வர்­களை எல்லை தாண்டி மீன்­பி­டித்த குற்­றச்­சாட்­டின் பேரில் இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்­த­னர்.

இதை­ய­டுத்து, அவர்­கள் அனை­வ­ரும் யாழ்ப்­பா­ணம், மன்­னார் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது. இரு வெவ்­வேறு சம்­ப­வங்­களில் 55 மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டது தமி­ழக மீன­வர்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி இருந்­தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதை­ய­டுத்து, அனைத்து மீன­வர்­க­ளை­யும் உட­ன­டி­யாக விடு­விக்க வலி­யு­றுத்தி ராமே­சு­வ­ரத்­தில் உள்ள மீன­வர்­கள் நேற்று உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

முன்­ன­தாக, கால­வ­ரை­யற்ற வேலை­நி­றுத்­தப் போராட்­டம் நடை­பெ­றும் என்­றும் மீன­வர் சங்­கங்­கள் அறி­வித்­தன. போராட்­டம் கார­ண­மாக ராமே­சு­வ­ரத்­தில் இருந்து மீன­வர்­கள் யாரும் மீன்­பி­டிக்­கச் செல்­லா­த­தால் அங்கு 800க்கும் அதி­க­மான விசைப்­ப­ட­கு­கள் துறை­மு­கத்­தில் நிறுத்திவைக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­போல் புதுக்­கோட்டை மீன­வர்­களும் கால­வ­ரை­யற்ற வேலை­நிறுத்­தப் போராட்­டத்தை தொடங்கி உள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், பாம்­பன் பகுதி மீன­வர்­களும் இன்று முதல் வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் பங்­கேற்க உள்­ள­னர்.

68 தமி­ழக மீன­வர்­க­ளை­யும் 75 பட­கு­க­ளை­யும் இலங்கை கடற்­ப­டை­யி­டம் இருந்து மீட்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­க­ருக்கு தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கடி­தம் வழி கோரிக்கை விடுத்­துள்­ளார்.

தமி­ழக மீன­வர்­கள் மீதான இலங்கை கடற்­ப­டை­யின் அச்­ச­மூட்டும் தாக்­கு­தல்­கள் தொடர்ச்சி­யாக நடை­பெ­று­வ­தைத் தடுக்க உட­னடி நட­வ­டிக்கை எடுத்­திட வேண்­டும் என்று முதல்­வர் தமது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

பாக் நீரி­ணைப் பகு­தி­யில் மீன்­பிடிப்­ப­தற்­கான பாரம்­ப­ரிய உரிமையை நிலை­நாட்­டு­வ­தும் மீன­வர்­க­ளின் உயிர், உடை­மை­களைக் காப்­ப­தும் அர­சின் கடமை என்­றும் முதல்­வர் கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.