கடத்தல் தங்கம் பறிமுதல்: சென்னைக்கு முதலிடம்

1 mins read
3c7b068e-2ad7-4fbb-8166-adef65128792
-

சென்னை: நாடு தழு­விய அள­வில் சென்னை விமான நிலை­யத்­தில்­தான் அதி­க­மான கடத்­தல் தங்­கம் பிடி­பட்­டுள்­ள­தாக மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்குப் பதில் அளித்த அவர், 2021-22 நிதி­யாண்­டில் மட்­டும் சென்னை விமான நிலை­யத்­தில் 130 கிலோ கடத்­தல் தங்­கம் பிடி­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

சென்­னைக்கு அடுத்­த­ப­டி­யாக, கோல்­கத்­தா­வில் 128 கிலோ கடத்­தல் தங்­க­மும் திருச்சி விமான நிலை­யத்­தில் 78 கிலோ­வும் பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

கொரோனா தொற்று கட்டுப்­பா­டு­கள் கார­ண­மாக கடந்த 2020-2021 நிதி ஆண்­டில் தங்­கக் கடத்­தல் வெகு­வாகக் குறைந்­துள்­ளது என்­றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மேலும், அதற்கு முன்­ன­தாக, 2019-20ஆம் நிதி­யாண்­டில் டெல்லி, மும்­பை­யில் அதிக அளவு கடத்­தல் தங்­கம் சிக்­கி­யது என்­றும் அவர் தமது பதிலில் குறிப்பிட்டார்.

"வரு­வாய் புல­னாய்வு இயக்­கு­ந­ர­கத்­தின் 2019-20ஆம் ஆண்டு அறிக்­கை­யில், நாடு முழு­வ­தும் விமா­னம் மட்­டு­மல்­லா­மல், கடல் வழி, தரை வழி கடத்தி வரப்­பட்ட சுமார் 185 மில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் நிர்­மலா சீதாராமன்.