மதுரை: பழமையான கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி

1 mins read
64ee25d0-e650-4e4e-87e0-ca82ac84fc22
-

மதுரை: பழமை வாய்ந்த கட்­ட­டம் இடிந்து விழுந்­த­தில், காவ­லர் ஒரு­வர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் குறித்து மதுரை போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

மதுரை மாந­கர் விளக்­குத்­தூண் பகுதி அருகே அந்­தப் பழ­மை­யான கட்­ட­டம் இருந்­தது. நேற்று முன்­தி­னம் மதுரை காவல்­து­றை­யைச் சேர்ந்த இரு காவ­லர்­கள் அப்­ப­கு­தி­யில் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது பழமை வாய்ந்த கட்­ட­டம் அருகே அவர்­கள் சென்று கொண்­டி­ருந்­த­போது, அது திடீ­ரென இடிந்து விழுந்­தது.

இந்த விபத்­தில் சர­வ­ணன் என்ற காவ­லர் சம்­பவ இடத்­தி­லேயே உயிரி­ழந்­தார். மற்­றொ­ருவர் படு­கா­யம் அடைந்த நிலை­யில், மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், உயி­ரி­ழந்த தலை­மைக் காவ­லர் சர­வ­ண­னின் குடும்­பத்­தா­ருக்கு நிவா­ர­ண­மாக ரூ.25 லட்­ச­மும் அவ­ரது மனை­விக்கு அர­சுப்­ப­ணி­யும் வழங்க முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

காய­ம­டைந்த காவ­ல­ருக்கு ரூ.5 லட்­சம் நிவா­ர­ண­மாக வழங்­கப்­படும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.