கோவை: ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை நடத்தி உள்ளது.
இந்த விசாரணை மூன்று மணி நேரம் நீடித்ததாகவும் அப்போது கோடநாடு பங்களா உள்ளிட்ட பல்வேறு சொத்துகள் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

