கோவில் வாசலில் யாசகம் பெறுவது போல் கஞ்சா விற்ற சாமியார் உள்பட மூவர் கைது

கோவில் வாசலில் யாசகம் பெறுவது போல் கஞ்சா விற்ற சாமியார் உள்பட மூவர் கைது

2 mins read
d8719610-1226-40c4-9f02-24d201da5015
-

சென்னை: சென்­னை­யில் உள்ள கோவில்­களின் வாச­லில் அமர்ந்து மக்­க­ளி­டம் யாச­கம் கேட்­ப­து­போல் கஞ்சா விற்று வந்த சாமி­யார் உள்­பட மூவரை மைலாப்­பூர் தனிப்­படை காவல்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

தன் மீது யாருக்­கும் சந்­தே­கம் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே நெடு­நாள்க­ளாக கஞ்­சாவை சாமி­யார் வேடத்­தில் விற்று வந்­த­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

மாலை நேரத்­தில் தனது காவி ஆடைக்­குள்­ளும் தலைப்­பா­கைக்­குள்­ளும் கஞ்­சாவை மறைத்து வைத்து சாமி­யார் ஒரு­வர் கஞ்சா விற்­பனை செய்து வரு­வ­தாக காவல்­து­றைக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, ஐஸ்­ஹ­வுஸ் பகு­திக்கு மாறு­வே­டத்­தில் வந்த காவல்­துறை அதி­கா­ரி­கள், கஞ்சா வாங்­கு­வ­து­போல் சென்று சாமி யாரைக் கையும் கள­வு­மா­கக் கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­யில், சாமி­யார் ராயப்­பேட்டை பகு­தி­யைச் சேர்ந்த தாமு என்­கிற சேகர், 50, என்­பது தெரி­ய­வந்­தது. அப்­பாவி மக்­க­ளுக்கு குறி சொல்­வது போல் ராயப்­பேட்டை, மைலாப்­பூர், ஐஸ் ஹவுஸ் பகு­தி­யில் கஞ்சா விற்­ப­னை­யில் கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே ஈடு­பட்டு வந்த தாக அவர் கூறி­யுள்­ளார்.

இவ­ருக்கு கஞ்சா விற்­பனை செய்த மொத்த வியா­பா­ரி­க­ளான தேனி மாவட்­டத்­தைச் சேர்ந்த ராஜா, 55, ஆசைத்­தம்பி, 41, ஆகிய இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து 7 கிலோ கஞ்­சா­வை­யும் மைலாப்­பூர் காவல்­துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

சாமியார் என்ற போர்வையில் கஞ்சா விற்பனை செய்த தாமு (நடுவில்) கைது செய்யப்பட்டார். ராஜா(இடது), ஆசைத்தம்பி ஆகிய இருவரும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சாமியார் வேடமணிந்த தாமுவிடம் கொடுத்து விற்பனை செய்தது தெரியவர அவர்களும் கைது செய்யப்பட்டனர். படம்: தமிழக ஊடகம்