கோவை: அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழகத்திலும் ஏற்படாமல் தடுக்க தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை ஆனைகட்டி பேருந்து நிறுத்தத்தில் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
"கேரளாவில் நிலவும் பறவைக் காய்ச்சலை அடுத்து கோவையில் உள்ள 1,200க்கும் அதிகமான கோழிப்பண்ணைகளில் கண் காணிப்பு தீவிரமாகியுள்ளது.
"கோழிப் பண்ணைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை பறவைக் காய்ச்சல் வந்தால் அதன் பாதிப்பு ஆறு மாத காலத்துக்கு நீடிக்கும் என்பதால் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் பண்ணையாளர்கள் இருக்கவேண்டும்," என்று தமிழக கால்நடைத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

