சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக ஓமிக்ரான் பாதிப்பில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டு உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், "ஏற்கெனவே நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னைக்கு வந்த ஒரு வருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த 33 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 34ஆக அதிகரித்து உள்ளது.
"எனினும், தமிழகத்தில் முதல்முறையாக ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
"மற்ற 33 பேரில் அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கும் மதுரையில் நால்வருக்கும் திருவண்ணாமலையில் இருவருக்கும் மதுரை, சேலத்தில் தலா ஒருவருக்கும் என இந்த ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
"இவர்களில் 18 வயதுக்குட்பட்ட இருவரைத் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.
"இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. தலைசுற்றல், தொண்டை கரகரப்பு மட்டுமே இருந்தது. விரைவில் அவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள்," என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கொரோனாவைவிட வேகமாக பரவும் இந்தக் கிருமியைக் கட்டுப் படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், "கொரோனாவை எதிர்த்துப் போராடியதுபோல் ஓமிக்ரானையும் எதிர்த்துப் போராடியே தீரவேண்டும்.
"இந்நேரத்தில் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்புக் கவசம் தடுப்பூசி மட்டும்தான்.
"தமிழகத்தில் மீண்டும் ஊர டங்கு வராது. மக்கள் கட்டுப்பாட்டு டன் நடந்துகொண்டால் ஓமிக்ரா னையும் கட்டுப்படுத்திவிடலாம்," என்றும் அமைச்சர் சொன்னார்.
இதற்கிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ேநற்று ஆலோசனை நடத்தினார்.
இதேேபால், இன்று முதல்வர் ஓமிக்ரான் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

