82 வயதில் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்

82 வயதில் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்

2 mins read
498b3d55-d535-4446-8dbc-7bf47d0c6282
-

மயி­லா­டு­துறை: கல்வி கற்க வயது ஒரு தடை­யல்ல என்­கி­றார் 82 வயது முதி­ய­வர் குரு­மூர்த்தி. "மன­தில் ஆர்­வம் இருந்­தால் போதும். தள்­ளாத வய­தி­லும் படிப்­பைத் தயக்­க­மின்றி தொட­ர­லாம்," என்று கூறும் குரு­மூர்த்தி, தனது 25வது பட்­டப் படிப்­பைத் தொடர்­வ­தற்கு விண்­ணப்­பித்­துள்­ளார்.

அவ­ருக்­குப் பொன்­னாடை போர்த்தி, வாழ்த்து தெரி­வித்து விண்­ணப்­பப் படி­வத்தை தமிழ்­நாடு திறந்­த­நி­லைப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பார்த்­த­சா­ரதி வழங்­கி­னார்.

மயி­லா­டு­துறை மாவட்­டம், குத்­தா­லம் அரு­கில் உள்ள கதிராமங்­க­லத்­தைச் சேர்ந்­த­வர் குருமூர்த்தி. இவர், பல­து­றைத் தொழில்நுட்­பக் கழக ஆசி­ரி­ய­ராக இருந்து ஓய்­வு­பெற்­ற­வர்.

'கற்­றது கைய­ளவு' என்று கூறும் குரு­மூர்த்தி, இதுவரை திரு­ம­ணம் செய்துகொள்­ளா­மல், படிப்பு மீது ஏற்பட்ட அலாதியான ஆர்­வம் காரணமா­க பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி உள்ளிட்ட 24 பட்­டங்­க­ளைப் பெற்­றுள்­ளார்.

"படிப்பிற்கு ஆகும் செலவை நான் எப்­போ­துமே பெரிதாக நினைத்­த­தில்லை," என்று சொல் பவர், அறிவை வளர்ப்பதற்கு தனது படிப்பு உறுதுணை புரிந்துள்ள தாகவும் குறிப்பிடுகிறார்.

25வது பட்­டப்­ப­டிப்­பாக எம்.ஏ. போலிஸ் அட்­மி­னிஸ்ட்­ரே­ஷன் என்ற பாடத்தைத் தேர்வு செய்து, கடந்த 23ஆம் தேதி திறக்­கப்­பட்ட தமிழ்­நாடு திறந்­த­நி­லைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படிவத்தையும் பாடப்புத்­த­கங்­க­ளையும் பெற்­றுக்கொண்­டார்.

இளைய தலை­மு­றை­யி­னர் 'வாட்ஸ்­அப்' உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களில் மூழ்­கி­ நேரத்தை வீண­டிப்­ப­தா­க­வும் வாழ்க்­கையை அர்த்­தத்­து­டன் வாழவேண்­டும் என்­றும் குருமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.

படிப்பு மீது அதிக ஆர்வம் உள்ளதால் எனக்குப் பிடித்த பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்து வருகிறேன். ஆத்ம திருப்தி தருவது கல்வி மட்டும்தான். புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டால் அதிலேயே மூழ்கிப் போகலாம். படிப்பில்தான் என் மகிழ்ச்சியே அடங்கியுள்ளது. ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை, முழுமையாக வாழ்ந்த திருப்தி என் மனதில் உள்ளது.

25வது பட்டப் படிப்புக்குத் தயாராகும் குரு­மூர்த்தி