தலைமை ஆசிரியர் உள்பட மூவருக்கு நிபந்தனை பிணை

தலைமை ஆசிரியர் உள்பட மூவருக்கு நிபந்தனை பிணை

1 mins read
0e7979c8-33b1-4b37-b6d4-e40d93ad979d
-

திரு­நெல்­வேலி: நெல்­லை­யில் சாஃப்டர் மேல்­நி­லைப்பள்­ளி­யின் கழி­வ­றைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாண­வர்­கள் இம்மாதம் 17ஆம் தேதி அன்று உயி­ரி­ழந்ததை அடுத்து, கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை வழங்கி திருநெல்வேலி மாவட்ட நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

பள்­ளி­யின் தலைமை ஆசி­ரியை ஞான­செல்வி, பள்­ளித் தாளா­ளர் சாமுவேல் செல்­வ­குமார், கட்­டட ஒப்­பந்­த­தா­ரர் ஜான் கென்­னடி ஆகிய மூவரும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் திருநெல்வேலி நடுவர் நீதிமன்றத்துக்கு மாலை 5 மணி அளவில் வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் உத்தரவிடப்பட்டுள்ளது.