சென்னை: தமிழகத்தில் உருமாறிய ஓமிக்ரான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக ஓமிக்ரான் பாதிப்பில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டு உள்ளது.
இந்த சூழலில், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்குகளை அமல்படுத்தலாம். அல்லது மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இப்போது, தமிழகத்தில் ஓமிக்ரான் கிருமிப்பரவலால் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் உள்ளது.
இந்நிலையில், ஓமிக்ரான் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த எந்தவிதமான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? வேண்டாமா? இரவு நேர ஊரடங்கு, நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங் களுக்கு தடை விதிப்பது, அரசியல், சமுதாய நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மருத்துவ வல்லுநர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதால் மக்களிடையே அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
டெல்டா கிருமியைவிட ஓமிக்ரான் கிருமி வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்தக் கிருமிப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை, சென்னை, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கை விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், 10%க்கும் மேல் ஓமிக்ரான் பாதிப்பு இருந்தால் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10%க்கும் குறை வாகவே ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதால் இரவு நேர ஊரடங்கு தேவையில்லை எனவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
31ஆக குறைந்த பாதிப்பு
இதனிடையே, "தொற்றில் இருந்து மூன்று பேர் குணம் அைடந்துள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 34ல் இருந்து 31க்கு குறைந்துள்ளது. நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவரது சகோதரி, சகோதரி மகள் ஆகியோர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மூவரும் குணம் அைடந்ததில் மகிழ்ச்சி. அவர்களை நலம் விசாரித்தபோது, லேசான பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது," என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உருமாறிய ஓமிக்ரான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக ஓமிக்ரான் பாதிப்பில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டு உள்ளது.
இந்த சூழலில், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்குகளை அமல்படுத்தலாம். அல்லது மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இப்போது, தமிழகத்தில் ஓமிக்ரான் கிருமிப்பரவலால் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஓமிக்ரான் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த எந்தவிதமான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? வேண்டாமா? இரவு நேர ஊரடங்கு, நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங் களுக்கு தடை விதிப்பது, அரசியல் சமுதாய நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
இதன்படி, புதிய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் மட்டும் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில், 10 விழுக்காட்டுக்கும் மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்டா கிருமியைவிட ஓமிக்ரான் கிருமி வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்தக் கிருமிப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, மதுரை, சென்னை, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் இரவுநேர ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று அரசு தரப்பில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இதுகுறித்து அறிவிக்கவுள்ளார்கள் என்றும் தகவல்கள் கூறியுள்ளன.
31ஆக குறைந்த பாதிப்பு
இதனிடையே, தொற்றில் இருந்து மூன்று பேர் குணம் அைடந்துள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 34ல் இருந்து 31க்கு குறைந்துள்ளது. நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவரது சகோதரி, சகோதரி மகள் ஆகியோர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மூவரும் குணம் அைடந்ததில் மகிழ்ச்சி. அவர்களை நலம் விசாரித்தேன், லேசான பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள அறி வுறுத்தப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

