காற்பந்து விளையாடி கிறிஸ்துமஸ் கொண்டாடிய மாணவர்கள்

காற்பந்து விளையாடி கிறிஸ்துமஸ் கொண்டாடிய மாணவர்கள்

1 mins read
99164702-3001-44d7-abfb-479f175dbb7b
சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன்பாக 'சாண்டா கிளாஸ்' உடையணிந்த பள்ளி மாணவர்கள் காற்பந்து விளையாட்டில் திளைத்துள்ளனர். படம்: இபிஏ-இஎப்இ -

வேளாங்­கண்ணி: நாகை மாவட்­டம், வேளாங்­கண்­ணி­யில் உல­கப்­பு­கழ் பெற்ற புனித ஆரோக்­கிய அன்னை பேரா­ல­யம் உள்­ளது. கிறிஸ்­து­மஸ் பண்­டி­கையை முன்­னிட்டு வண்ண விளக்­கு­க­ளால் ஜொலித்து வரும் பேராலயத்தில் நேற்று நள்­ளி­ரவு சிறப்­புத் திருப்­பலியும் நடந்­தது.

அன்னை மாதா பேரா­ல­யத்­தில் உள்ள விண்­மீன் ஆல­யத்­தில் கிறிஸ்­து­மஸ் குடிலும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆலயத்துக்குச் செல்­லும் வழி ­எங்கும் 400 அடி நீளம், 60 அடி அக­லத்­துக்கு மின் விளக்­கு­க­ளால் அலங்­கா­ரப் பந்­தல் போடப்பட்டுள்ளது.

இது­கு­றித்து பேரா­லய அதி­பர் இரு­த­ய­ராஜ் கூறு­கை­யில், "பேராலயத்துக்கு வரும் அனை­வ­ரும் கட்­டா­ய­மாக முக­க்க­வ­சம் அணிந்து, சமூக இடை­வெ­ளியைப் பின்­பற்ற வேண்டும். திறந்­த­வெளி அரங்­க­மான புனித சேவி­யர் திட­லில் சிறப்பு வழி­பாடுகளை நடத்தவும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன," என்றார்.