மதுரை: தினந்தோறும் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடாமல் ரசம் வைத்து சாப்பாடு போட்ட மனைவியிடம் மல்லுகட்டிய கணவர், கடைசியில் அவரை ஆத்திரத்துடன் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் ெதாடர்பில், குற்றம் நிருபிக்கப்பட்டதாகக் கூறி கணவருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.5,000 அபராதம் விதித்து மதுரை மாவட்ட நீதிபதி பாலகுமார் உத்தரவிட்டார்.
அத்துடன், தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.
மதுரை மாவட்டம், கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன்-சிவஞானசெல்வி தம்பதியர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு, தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2016ல் சம்பவம் நடந்தபோது, ஆட்டோ சவாரிக்கு சென்றுவிட்டு மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்துள்ளார் கண்ணன்.
அப்போது, மனைவி ரசம் சாதத்தை வைக்க, "தினமும் ரசம் சோறுதான் சாப்பாடா?" என்று கேட்டு சிவஞானசெல்வியுடன் கண்ணன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தனது மனைவியின் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.