சென்னை: ஆபாச பேச்சு உரை
யாடலைப் பதிவு செய்து மாணவிகளை மிரட்டி, பணம் பறித்த
கல்லுாரி மாணவன் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டான். இந்த வழக்கில், மூன்று மாணவியர் உட்பட ஒன்பது பேரை காவலர் கைது செய்து உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பிரேம்குமார், பதினைந்து வயதுடைய இரு பள்ளி மாணவிகளுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களுடன் ஆபாசமாக பேசி, உரையாடலைப் பதிவு செய்துள்ளார். அதை வைத்து மாணவிகளை மிரட்டி பணம்
பறித்துள்ளார்.
இதிலிருந்து விடுபட நினைத்து மாணவியர் 17 வயதுடைய
கல்லுாரி மாணவியின் உதவியை, நாடியுள்ளனர்.
அவர் அசோக்குமார் என்ற
கல்லூரி மாணவரைத் தொடர்புகொண்டு பிரேம்குமாரிடம் இருந்து அலை
பேசியை பெற்றுத் தரும்படி கேட்டிருக்கிறா்.
பள்ளி மாணவிகள் மூலமாக பிரேம்
குமாரை வரவழைத்து, அசோக்குமாரும் அவருடைய நண்பர்
களான செங்குன்றம் லெவின், 22, ஜெகநாத
புரம் பிரவின்குமார், 21, நெடுவரம்பாக்கம் ஜெகநாதன், 20, ஸ்டீபன், 21, ஈகுவார்பாளையம் ஞான
சேகரன் ஆகியோர் பிரேம்குமாரை பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு கொண்டுசென்று இரவு வரை பலமாக தாக்கினர். பின் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று வெட்டி கொலை செய்து புதைத்துள்ளனர்.
பிரேம்குமாரை கொலை செய்த வழக்கில் பதிவான வாக்குமூலத்தின் அடிப்படையில், அசோக், லெவின், பிரவின்குமார்,
ஜெகநாதன், ஸ்டீபன், மோசஸ், இரு பள்ளி மாணவியர், கல்லுாரி மாணவி என, மொத்தம் ஒன்பது பேரை காவலர்கள் நேற்று கைது செய்தனர்.

