கரூர்: மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவுடன் கெட்டுப்போன முட்டைகளை விநியோகித்த சத்துணவு அமைப்பாளர், சமையல் பணியாளர், சத்துணவுப் பணிகள் முறையாக நடக்கிறதா? என கண்காணிக்கத் தவறிய தலைமை ஆசிரியர் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ளது நாகனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் கடந்த சில நாள்களாகவே மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன, அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, ஊர் மக்கள் பள்ளி நிர்வாகத்திடம் நேரில் கேட்கச் சென்றபோது, பள்ளி நிர்வாகிகள் முறையாகப் பதிலளிக்க வில்லை எனவும் தெரிகிறது.
சத்துணவுக் கூடத்தில் இருந்த முட்டைகள் அழுகியும் புழுக்கள் நெளிந்தபடியும் இருந்த நிலையில், அவற்றை சிலர் காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்ற ஆட்சியர் பிரபு சங்கர், அங்குள்ள உணவுப்பொருள்களையும் இருப்பில் இருந்த முட்டைகளின் தரத் தையும் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், "அனைத்து உணவுப்பொருட் களும் நல்ல நிலையில் இருந்தன. தண்ணீரில் இட்டு பரிசோதித்த போது முட்டைகளும் நல்ல நிலையிலேயே இருந்தன.
"இருப்பினும், கடந்த வாரம் வாங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்துக்குள் மாணவர்களுக்கு அளிக்காமல், கெட்டுப்போன முட்டைகளையும் பள்ளியில் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. தரமில்லாத முட்டைகளை வைத்திருந்த சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையல் பணியாளர் லட்சுமி, தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.

