சென்னை: தமிழ் வழியில் படித்து 26 வயதே ஆன இளைஞர் ஒருவர் நீதிபதி ஆகியுள்ளது மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தயங்கக் கூடாது," என்று இளம் நீதிபதி ஆதியான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
"நீதிபதிக்கான தேர்வு எழுதியதில் நான் மட்டுமே தமிழ் வழியில் கல்வி கற்றவன். இதுவே எனது அடையாளமாகி உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டிைய அடுத்த செட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஆதியான், 26.
இவர் திருப்பூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதி யான், "அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்து ஒரு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளேன். அரசுப் பள்ளியில் படித்தால் இளம் வயதிலேயே என்ைனப் ேபால் நீதிபதியாகவும் ஆகலாம் என்பதற்கு நானே ஒரு முன்னுதாரணம்.
"ஆங்கிலம் என்பது மொழி. அது அறிவு கிடையாது. மற்றவர் களுடன் தொடர்புகொள்வதற்கு ஒரு கருவியாக ஆங்கில மொழி பயன் படுகிறது. தாய்மொழியில் கல்வி கற்றால் உங்களால் நீங்கள் படிக்கும் பாடத்தை தெளிவாகப் புரிந்து படிக்கமுடியும்," என்றவர், தான் ஒரு தினக்கூலி விவசாயியின் மகன் என்றும் குறிப்பிட்டார்.

