ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை யினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுதலை செய்யும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று ரயில் மறியல் போராட் டத்தை நடத்தவும் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கக் கூட் டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கக்கோரியும் 10 விசைப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் கோரி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வாரத்துக்கு முன்பு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி இருந்தார். ஆனால், இதுவரை மீனவர்கள் விடுவிக்கப்படாததால், அனைத்து மீனவர் சங்கங்களின் அவசரக் கூட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வதற்கு முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

