24 குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்தன

24 குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்தன

2 mins read
cdf6c951-0589-470b-8acc-4828306a7ca9
-

சென்னை மாநகரில் மட்டும் வாழ்வதற்கே தகுதியில்லாத வகையில் 23,000 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் 40, 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை. அதனால், கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: சென்­னையை அடுத்த திரு­வொற்­றி­யூ­ரில் உள்ள அரி­வாக்­கு­ளம் குடிசை மாற்று வாரிய குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் நேற்று திடீ­ரென இடிந்து விழுந்­தது.

28 ஆண்­டு­க­ளுக்கு முன்பு கட்­டப்­பட்ட கட்­ட­டத்­தில் விரி­சல் ஏற்­பட்டு சற்று சரிந்­தி­ருந்த நிலை­யில், குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ரும் அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர்.

இதை­ய­டுத்து, பெரிய அள­வில் உயிர்ச் சேதம் ஏற்­ப­டா­மல் தவிர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தக் குடி­யி­ருப்­பில் இருந்த 24 வீடு­களும் தரை­மட்­ட­மா­னதை அடுத்து, பாதிப்­ப­டைந்­த­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக மாற்று வீடு­களும் நிவா­ரண உத­வி­களும் வழங்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

"மக்­கள் தங்­க­ளது பாதிப்­பில் இருந்து மீள­வும் புதிய வாழ்க்கை யைத் துவங்­க­வும் 24 குடும்­பங்­க­ளுக்­கும் தலா ஒரு லட்­சம் ரூபாய் நிவா­ரண நிதி வழங்க உத்­த­ர­விட்­டுள்­ளேன்," என்­றார்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் தா.மோ. அன்­ப­ர­சன் பேசி­ய­போது, சென்னை மாந­க­ரில் மட்­டும் வாழ்­வ­தற்கே தகுதியில்­லாத வகை­யில் 23,000 வீடு­கள் உள்­ளன. இது­போன்ற வீடு­களை படிப்­ப­டி­யாக இடிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தெரி­வித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்­ளி­ரவு நேரத்­தில் விரி­சல் ஏற்­பட்­ட­போது பெரும் சப்­தம் கேட்­ட­தாகவும் விரி­சல் பெரி­ய­ அள­வில் இருந்ததால் நேற்று காலை­யில் இருந்தே அங்கு வசித்தவர்கள் வீடு­களை விட்டு வெளி­யே­றி­யதாகவும் தகவல்கள் கூறின.

கட்­டட இடி­பா­டு­களில் இன்­னும் யாரா­வது சிக்­கி­யுள்­ள­னரா என தீய­ணைப்பு வீரர்­கள் தேடி வரு­கின்­ற­னர். இடி­பா­டு­களை அகற்­றும் பணி­யிலும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

திருவொற்றியூர் அரிவாக் குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு கட்டடங்களாக உள்ளன. அவற்றில் 'டி' கட்டடத்தில் 24 வீடுகள் உள்ளன. இந்நிலையில், இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது.

படம்:

தமிழக ஊடகம்