தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை: 6,623 பேர் கைது

2 mins read
34282376-023a-45fb-bd43-d06933a5ec43
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பொட்டலங்களை வீட்டிலேயே ஓராண்டாகப் பதுக்கிவைத்து விற்றுவந்த ஏழு பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: மாநி­லம் முழு­வ­தும் கஞ்சா, ஹெரா­யின், குட்கா, மாவா உள்­ளிட்ட போதைப்­பொ­ருள்­களைக் கடத்தியது, விற்பனை செய்தது தொடர்பாக 6,623 பேரை கடந்த மூன்று வாரங்களாக தமி­ழக காவல்­துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளி, கல்­லூரி அரு­கில் விற்­கப்படும் போதைப்­பொ­ருள்­ புழக்கத் தைத் தடுக்க காவல்­துறையினர் நட­வ­டிக்­கை­ எடுக்­க­வேண்­டும் என்பது மக்கள் பலரின் நெடுநாள் கோரிக்­கையாக இருந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், தமி­ழக டிஜிபி சைலேந்­தி­ர­பாபுவின் உத்தரவுப்படி 'ஆப­ரே­ஷன் கஞ்சா வேட்டை' என்ற பெய­ரில் மாநி­லம் முழு­வ­தும் கடந்த மூன்று வாரங்­க­ளாக அதிரடி சோதனை நடந்து வந்­தது.

சோத­னை­யின்­போது பிடி­பட்ட 6,623 குற்­ற­வா­ளி­க­ளி­ட­மி­ருந்து ரூ.23 கோடி மதிப்­பி­லான ஹெரா­யின், ரூ.4.20 கோடி மதிப்­பி­லான குட்கா, ரூ1.80 கோடி மதிப்­பி­லான கஞ்சா உள்­ளிட்ட போதைப் பொருள் களைக் காவல்துறை அதிகாரிகள் பறி­முதல் செய்­துள்­ள­னர்.

இது­கு­றித்து காவல்து­றை தலைமை இயக்­குநா் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் கடந்த வாரம் நடைபெற்ற சோத­னை­யில் ரூ.23 கோடி மதிப்­புள்ள 23 கிலோ ஹெரா­யின் போதைப்­பொ­ருள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு, ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா்.

கடந்த மூன்று வாரங்­களில் கஞ்சாவைக் கடத்தி, விற்­பனை செய்து வந்த 871 போ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா்.

அவா்க­ளி­டம் இருந்து ரூ.180 கோடி மதிப்­புள்ள 1,774 கிலோ கஞ்சா, கடத்­த­லுக்­குப் பயன்­ப­டுத்­திய 164 நான்கு சக்­கர வாக­னங்­கள் பறிமுதல் செய்­யப்­பட்­டுள்­ளன.

குறிப்பாக, மாநிலம் முழுவதும் பரவலாக கஞ்சா விற்பனை செய்து வந்த மொத்த வியாபாரிகளான பெரியசாமி, 39, சீனிவாசன், 39, ஆகிய இருவரையும் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வைத்து நாமக்கல் காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால், கஞ்சா மொத்த வியாபாரம் பெரும் அளவில் முடக்கப்பட்டுள்ளது.

புகை­யி­லைப் பொருள்­கள் கடத்­தி­ய­தாக 547 வழக்­கு­களில் 5,037 பேர் கைதாகி உள்ளனர். ரூ.420 கோடி மதிப்­புள்ள 40 டன் தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

தடை செய்­யப்­பட்ட லாட்­டரி விற்­பனை செய்­த­தாக 1,091 போ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.