புதுமணப் பெண் மீது காரை மோதிய ஓட்டுநர் பிடிபட்டார்

புதுமணப் பெண் மீது காரை மோதிய ஓட்டுநர் பிடிபட்டார்

1 mins read
ded6c4fe-cc86-425f-9abc-2d62bd0705eb
-

சென்­னை: குடி­போ­தை­யில் வேக­மாக காரை ஓட்­டிய ஆட­வர் ஒரு­வர், கார் அதன் கட்­டுப்­பாட்டை இழந்­த­தில், சாலை­யோ­ரம் நின்று­கொண்­டி­ருந்த மாது ஒரு­வர்­மீது மோதினார். தமிழ்­நாட்­டின் காஞ்சி­பு­ரத்­தில் திங்­க­ளன்று இந்தச் சம்பவம் நடந்தது.

கவ­னக்­கு­றை­வு­டன் காரை வேக­மாக ஓட்டி மர­ணம் விளை­வித்­த­தற்­காக மதன் எனும் கார் ஓட்­டு­நரை காவல்­து­றை­யினர் கைது செய்­த­னர்.

கீதா பிரியா, 25, என்ற மாது, மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்டு ஒரு மணி நேரம் கழித்து சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார். அவர் புதி­தாக திரு­ம­ண­மா­ன­வர்.

மருந்­துக்­கடை ஒன்­றுக்கு வெளியே தம்­மு­டைய கண­வ­ருக்­காக அவர் காத்­தி­ருந்­த­போது, அவ்­வ­ழி­யாக வந்த கார் அவர்­மீது மோதி­ய­தாக காவல்­துறை கூறியது.

புத்­தாண்­டைக் கொண்­டா­டு­வதற்­காக கண­வர், மனைவி இரு­வரும் சென்­னைக்கு வந்­தி­ருந்­த­னர். அவ்­வி­ரு­வ­ரும் வங்கி ஒன்­றில் ஊழி­யர்­க­ளா­கப் பணி­பு­ரிந்­த­னர்.

கீதா­வின் கண­வர் மணி­கண்­டன், 30, மருந்து வாங்­கு­வ­தற்­காக மருந்­துக்­க­டைக்­குச் சென்­றி­ருந்­தார். அக்­க­டைக்கு வெளியே சாலை­யோ­ர­மாக கீதா காத்­தி­ருந்­தார்.

அவ்­வ­ழி­யாக வேக­மாக வந்த கார் ஒன்று, கட்­டுப்­பாட்டை இழந்து அங்­கி­ருந்த ஆட்டோ மீதும் இரு வாக­னங்­கள் மீதும் மோதி­விட்டு, கீதா மீது ஏறி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­கள் காவல்­து­றை­யி­டம் கூறி­னர்.

அங்­கி­ருந்த வழிப்­போக்­கர்­கள், காரின் பின் சக்­க­ரத்­தில் சிக்­கிக்­கொண்ட கீதாவை மீட்டு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். ஆனால், கீதா உயி­ரி­ழந்­தார்.