தமிழகத்தில் 118 பேருக்கு அறிகுறி; புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தவிர்க்க வலியுறுத்து சமூகப் பரவலாக மாறும் ஓமிக்ரான்

தமிழகத்தில் 118 பேருக்கு அறிகுறி; புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தவிர்க்க வலியுறுத்து சமூகப் பரவலாக மாறும் ஓமிக்ரான்

2 mins read
00cf3735-d551-418b-ba38-b103d8eb1887
ஓமிக்ரான் கிருமிப் பரவலைத் தடுக்க சென்னை விமான நிலையத்தில் ேமற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கைகள், கிண்டி கிங்ஸ் மருத்துவ மனையின் சிசிச்சை வசதிகள் உள்ளிட்டவற்றை மத்திய நிபுணர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் சமூ­கப் பர­வ­லாக மாறி வரு­வ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் கூறி­யுள்­ளார்.

மாநி­லத்­தில் ஓமிக்­ரான் அறி­கு­றி­க­ளு­டன் 118 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கக் கூறிய அவர், அவா்க­ளின் மாதி­ரி­கள் சோத­னைக்காக புனே நக­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

எனி­னும், சோதனை முடி­வு­கள் தாம­த­மா­கவே தெரி­ய­வ­ரு­வ­தால், அதற்­குள் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சிகிச்சை முடிந்து தங்­க­ளது வீடு திரும்பி விடு­கின்­ற­னர்.

இத­னால், ஓமிக்­ரான் தொற்றை உறுதி செய்­வ­தற்கு ஆகும் கால தாம­தத்தைக் குறைக்க தமி­ழ­கத்தில் உள்ள மர­பி­யல் ஆய்­வுக்­கூ­டத்தைப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கு­மாறு மத்­தி­யக் குழு­வி­ன­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளோம் என்­றார்.

தமி­ழ­கத்­தின் அண்டை மாநி­லங்­க­ளான கேரளா, கர்­நா­ட­கா­வைப் போல் தமி­ழ­கத்­தி­லும் இரவு நேர ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­டுமா என்­பது குறித்து இம்­மா­தம் 31ஆம் தேதி முதல்­வர் முடி­வெ­டுத்து அறி­விப்­பார் எனத் தெரி­வித்த அமைச்­சர், ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்ட 34 பேரில் இன்­னும் ஐவர் மட்­டுமே சிகிச்­சை­யில் இருப்­ப­தா­க­வும் சொன்­னார்.

தேனாம்­பேட்­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் பேசி­ய­போது, "தமி­ழ­கத்­தில் 118 பேரின் மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அதன் முடி­வு­கள் வந்தபின்­னரே எத்­தனை பேர் இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர் என்ற விவ­ரம் தெரி­ய­வ­ரும்.

"வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளி­டம் இருந்து மட்­டும் பரவி வந்த ஓமிக்­ரான் தொற்று, இப்­போது சமூக பர­வல் என்ற நிலையை எட்­டி­யுள்­ளது.

"ராஜீவ் காந்தி அரசு மருத்­துவ மனை நோயாளி ஒரு­வ­ரி­டம் இருந்து பல­ருக்­கும் தொற்று பர­வி­யதை சமூ­கப் பர­வ­லுக்கு உதா­ர­ண­மா­கக் கூற­லாம்," என்றார்.

இதற்­கி­டையே, புத்­தாண்டு, பொங்­கல் என பண்­டி­கைகள் வர­உள்­ள­தால், மக்­கள் கூட்­டம் கூடு­வ­தைத் தவிர்த்­தால்­தான் பாதிப்­பு­க­ளைத் தவிர்க்கமுடி­யும். எனவே, பொது இடங்­களில் புத்­தாண்டுக் கொண்­டாட்­டம் வேண்­டாம்," என சுகா­தா­ரத் துறை எச்­ச­ரித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் ஓமிக்­ரான் பாதிப்பு குறித்து வனிதா, பர்­பசா, சந்­தோஷ்­கு­மார், தினேஷ்­பாபு உள்­ளிட்ட நால்­வர் கொண்ட மத்­திய மருத்­து­வக் குழு­வி­னர் ஆய்வு மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

தமி­ழக-கேரள எல்­லைப் பகு­தி­களில் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாடு­காணி, பாட்­ட­வ­யல், சோலாடி உள்ளிட்ட எல்­லை­யோர சோத­னைச் சாவ­டி­க­ளி­லும் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனைச் சாவடி யிலும் கண்­கா­ணிப்பை பலப்­ப­டுத்தி உள்­ள­னர்.