திருப்பத்தூர்: வேலை வாய்ப்புகளை வழங்குவதாக போலி நேர்முகத் தேர்வுகளை நடத்தி, மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் வேலை தருவதாகக் கூறி ரூ.1.5 கோடிக்கு மேல் பணம் பறித்த எட்டு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூரில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் பெயரில் போலி நேர்முகத்தேர்வுகளை நடத்தி, பணி நியமன ஆணைகளை வழங்கிய எட்டு பேரை ைகது செய்துள்ள போலிசார், அவர்களை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
சென்னை காவல்துறை ஆணையகத்தில் அண்மையில் ஆா்.சுந்தரேசன் என்பவர் அளித்திருந்த புகாரில், ஒரு மோசடிக் கும்பல் மதுரை, கோயம்புத்தூா், காஞ்சிபுரம், சேலம் ஆகிய இடங்களில் போலி நோ்முகத் தோ்வை நடத்தி, பண மோசடி செய்து வருகிறது. இவர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்தவா்கள், எங்களை அணுகி வேலை கேட்கின்றனா். எனவே குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
திருப்பத்தூரில் கைதான எட்டு பேைரயும் சென்னைக்கு அழைத்து வந்து, 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

