மாற்றுத் திறனாளிகளும் அலைகளில் கால் நனைக்க மெரினாவில் தனிப்பாதை

1 mins read
01760370-6c8d-4a73-89e2-11020e043e3d
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் சென்று மகிழும் மாற்றுத்திறனாளிகள். படம்: இபிஏ -

சென்னை: மாற்­றுத்­தி­ற­னா­ளி­களும் கடல் அலை­களை அரு­கில் கண்டு ரசிக்­க­வும் அவற்­றில் கால் நனைக்­க­வும் வச­தி­யாக சென்னை மெரினா கடற்­க­ரை­யில் தற்­கா­லி­கப் பாதை அமைக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

அனைத்­து­லக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் தினத்­தை­யொட்டி சென்னை மாந­க­ராட்சி சார்­பில் ஒரு வார காலம் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­யை­யொட்டி இந்த பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள முதல்­வர் மு.க.ஸ்டா­லின், 'சிறிய பணி­தான் இது; பெரிய மாற்­றத்­துக்­குத் தொடக்­க­மும் கூட' என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"எத்­தனை முறை சென்­றா­லும் சலிக்­கா­தது கடல் என்­பார்­கள். அந்­தக் கடல் அலை­யில் ஒரு­மு­றை­யே­னும் கால் நனைக்க நினைத்­தி­ருந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் எண்­ணம் நன­வா­கும் வண்­ணம் தற்­கா­லி­கப் பாதையை ஏற்­ப­டுத்தி உள்­ளோம்.

"விரை­வில் நிரந்­த­ரம் ஆக்­கு­வோம்," என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மெரினா கடற்­க­ரை­யில் சுமார் 200 மீட்­டர் நீளத்­திற்கு மரப்­ப­ல­கை­க­ளைக் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்ள இந்த தற்­கா­லிக பாதை­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஏது­வாக, மணற்­ப­ரப்­பில் இயங்­கக்­கூ­டிய ஐந்து சக்­கர நாற்­கா­லி­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.