மதுரையில் சிறைக் கைதிகள் இடையே மோதல்

1 mins read
67896803-618c-49f2-ace0-3222a74706fe
-

மதுரை: சிறைக்­கை­தி­கள் இரு குழுக்­க­ளா­கப் பிரிந்து மோதிக் கொண்­ட­தால் மதுரை மத்­திய சிறை­யில் பதற்­றம் நில­வி­யது.

கைதி­கள் சிலர் கற்­கள், போத்­தல்­கள் ஆகி­ய­வற்றை வீசி எறிந்து ஒரு­வரை ஒரு­வர் தாக்­கிக்கொண்­ட­னர். மேலும் சிலர் சிறைச்­சா­லை­யில் உள்ள மாடிச்­சு­வ­ரின் மீது ஏறி நின்று, கையில் கிடைத்­த­வற்றை எல்­லாம் வெளியே வீசி எறிந்­த­னர்.

நேற்று முன்­தி­னம் மதிய உணவு இடை­வெ­ளி­யின்­போது இரு குழுக்­க­ளுக்கு இடையே மோதல் வெடித்­தது.

அப்­போது ஒரு­த­ரப்­பைச் சேர்ந்த கைதி ஒரு­வரை மட்­டும் சிறைக்­கா­வ­லர்­கள் விசா­ர­ணைக்­காக அழைத்­துச் சென்­ற­தா­க­வும் இத­னால் அத்­த­ரப்­பி­னர் கோப­ம­டைந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அவர்­கள் சிறை நிர்­வா­கத்­துக்கு எதி­ராக முழக்­கங்­கள் எழுப்­பி­ய­து­டன், கையில் கிடைத்த கற்­கள் உள்­ளிட்­ட­வற்றை சிறைக்கு வெளியே வீசி எறிந்­த­னர். இத­னால் சாலை­யில் நடந்து சென்­ற­வர்­கள் மீது கற்­கள் விழுந்­த­தில் அவர்­க­ளுக்கு காயம் ஏற்­பட்­டது.

சில கைதி­கள் தங்­க­ளது உட­லில் பிளே­டால் கிழித்­தும் காயப்­ப­டுத்­திக்கொண்­ட­னர். இதை­ய­டுத்து இரு­த­ரப்­பி­ன­ரும் மீண்­டும் மோதிக்­கொள்­வ­தைத் தவிர்க்­கும் பொருட்டு சிறைக் கண்­கா­ணிப்­பா­ளர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­க­வும் அதன் பின்­னர் அமைதி திரும்­பி­ய­தா­க­வும் ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

அர­சி­யல் பிர­மு­கர் ஒரு­வ­ருக்­கும் திருச்­சி­யைச் சேர்ந்த ஒரு கைதிக்­கும் இடை­யே­யான மோதல்­தான் இந்த சம்­ப­வத்­துக்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு சிறை வளா­கத்­தில் உள்ள மருத்­து­வர் சிகிச்சை அளித்­தார்.

சிறை வளா­கத்­தைச் சுற்றி பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.