தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி மதுபான ஆலை: கைது

1 mins read
4ef39770-a6d7-4c82-8d80-2074b74567df
-

ஓசூர்: கிருஷ்­ண­கிரி மாவட்­டம் ஓசூர் அருகே கதி­ரேப்­பள்­ளி­யில் போலி மது­பான ஆலை நடத்­தி­ய­தாக மூவரை காவல்­துறை கைது செய்­தது.

கர்­நா­டக மாநி­லத்­தில் இருந்து பொட்­ட­லத்­தில் மதுவை வாங்கி வந்து அதைக் கண்­ணாடி போத்­தல்­களில் அடைத்து, தமி­ழக டாஸ்­மாக் மது போத்­தல்­கள் போன்று ஒட்டுத்தாள்கள், வில்லை கள் ஒட்டி மூடி பொருத்தி விற்று வந்த கும்­பல் சிக்­கி­யது.

ஒரு வாக­னத்­தைச் சோதனை யிட்ட அதி­கா­ரி­கள் அதில் 30 போலி மது போத்­தல்­களைக் கைப்­பற்றி தமி­ழ­க­த்தைச் சேர்ந்த மூவ­ரைப் பிடித்­த­னர்.

அவர்­கள் கொடுத்த தக­வ­லின் பேரில் அதி­கா­ரி­கள் போலி மது ஆலை ஒன்­றைக் கண்­ட­னர். அந்த இடத்­தில் 700 மது போத்­தல்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

அவற்றை விற்­ப­னைக்குக் கொண்­டு­செல்ல பயன்­ப­டுத்­திய கார், குட்டி லாரி, இரு­சக்­கர வாக­னம் ஆகி­ய­வற்­றை­ அதிகாரிகள் பறி­மு­தல் செய்­த­னர்.