ஐந்து மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்

1 mins read
36fe911d-713e-4bf1-aa20-dc2c4b774ec6
-

சென்னை: தமிழ்­நாட்­டில் மருத்­து­வக் கல்­லூரி இல்­லாத மாவட்­டங்­களில் விரை­வில் மருத்­து­வக் கல்­லூ­ரியை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சட்­ட­மன்­றத்­தில் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று தெரி­வித்­தார்.

இவ்­வாண்­டிற்­கான முதல் சட்­ட­மன்­றக் கூட்­டம் கடந்த 5ஆம் தேதி முதல் சென்னை கலை­வா­ணர் அரங்­கில் நடை­பெற்று வரு­கிறது.

ஆளு­நர் உரை­யு­டன் துவங்­கிய அவைக்­கூட்­டம் நேற்­று­டன் நிறை­வ­டைந்­தது.

நேற்­றைய கேள்வி அங்­கத்­தின் போது, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மக்­க­ளின் முக்கிய தேவைகளை முன்­வைத்து கேள்வி எழுப்­பி­னர்.

சீர்­காழி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மு.பன்­னீர்­செல்­வம் மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் மருத்­து­வக் கல்­லூரி துவங்க அரசு முன்­வ­ருமா எனக் கேட்­டார்.

அதற்கு மா.சுப்­பி­ர­ம­ணி­யன் பதி­ல­ளித்­த­போது, மயி­லா­டு­துறை, ராணிப்­பேட்டை, காஞ்­சி­பு­ரம், தென்­காசி உள்­ளிட்ட ஐந்து மாவட்­டங்­களில் படிப்­ப­டி­யாக மருத்­துவக் கல்­லூ­ரி­களைத் துவங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார்.

கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்து பேசிய கைத்­தறி, துணி­நூல் துறை அமைச்­சர் காந்தி, மதுரை, கரூர், கட­லூர் உள்­ளிட்ட பகு­தி­களில் ஏற்­கெ­னவே ஜவு­ளிப் பூங்கா செயல்­பட்டு வரு­கிறது. இத­னால் சங்­க­ரன் கோவி­லில் அமைக்­கும் கோரிக்கை எழ­வில்லை. சங்­க­ரன்­கோ­வில் தொகு­தி­யில் பருத்தி கொள்­மு­தல் நிலை­யம் அமைக்­கப்­படும் என்று கூறி­னார்.