வேலூர்: வேலூரில் தங்குவிடுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
அதுவரை அவர்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
வேலூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் மூலம் தொற்று பரவுவது தெரிய வந்துள்ளதால் அவர்கள் அதிகம் வசிக்கும் காந்தி சாலை உள்ளிட்ட எட்டு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தங்குவிடுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் வெளியில் வர முடியாதபடி ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அவ்வழியே செல்ல அனுமதி இல்லை.

