திருச்சி விமான நிலையத்தில் அனைத்துலக விரைவு கூரியர் சேவை ஒருவழியாக தொடங்கவிருப்பதாக சுங்கத்துறை அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில் திருச்சி சுங்கத்துறை ஜனவரி 4ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு, திருச்சி விமான நிலையத்தில் அனைத்துலக கூரியர் சேவை தொடங்கப்படுவதற்கு வழிவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்துலக விரைவு கூரியர் சரக்கு முனையத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் காப்பாளராக இருக்கும்.
அனைத்துலக கூரியர் சேவைக்கு பல ஆண்டுகளாக அனுமதி கோரப்பட்டு வந்தது.
இதை ஏற்று கடந்த 2013ல் அதற்கான அனுமதியை சுங்கத்துறை அளித்தது. ஆனால், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தாமதம் நிலவி வந்தது.