நாமக்கல்: ராசிபுரம் மருத்துவ மனைக்கு தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் (படம்) சிகிச்சைக்கு வந்த ராஜா என்ற ஆடவரைக் கண்டு மருத்துவமனையில் இருந்தவர்கள் பயந்து ஓடினர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, விவசாயி.
இவர், தனது நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது.
உடனே சுதாரித்துக்கொண்ட ராஜா, நான்கு அடி நீள பாம்பை உயிருடன் லாவகமாகப் பிடித்து, அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அடைத்து எடுத்துக்கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறவந்தார்.
மருத்துவர்கள் ராஜாவை மருத்துவமனையில் அனுமதித்து தகுந்த சிகிச்சை அளித்தனர்.