ரூ.40 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு

ரூ.40 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு

1 mins read
94c2b476-09c4-47c2-83be-7f90fdeaf878
பறிமுதல் செய்யப்பட்ட பனிரெண்டு ஐம்பொன் சிலைகளில் எட்டு சிலைகள் 11ஆம் நூற் றாண்டைச் சேர்ந்தவை யாக இருக்கக் கூடும் எனக் கருதப்படு கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற உள்ளது.படம்: தகவல் ஊடகம் -

சென்னை: மாமல்­ல­பு­ரம் பகு­தி­யில் உள்ள ஒரு விருந்­தி­னர் இல்­லத்­தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்­புள்ள 12 ஐம்பொன் சிலை­களை காவல்­து­றை­யி­னர் கைப்­பற்றி உள்ள­னர். அதை வெளி­நா­டு­களுக்கு கடத்த திட்­ட­மிட்­டி­ருந்த காஷ்­மீ­ரைச் சேர்ந்த ஜாவித்ஷா என்­ப­வர் கைதா­னார்.

தங்­க­ளுக்­குக் கிடைத்த ரக­சிய தக­வலை அடுத்து, அக்­கு­றிப்­பிட்ட விருந்­தி­னர்­க­ளின் இல்­லத்­தில் சோதனை மேற்­கொண்­ட­போது, இச்­சி­லை­கள் சிக்­கி­ய­தா­க­வும் அவற்­றில் பல 11ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்­த­வை­யாக இருக்­க­லாம் என்­றும் தமி­ழக சிலை கடத்­தல் பிரிவு கூடு­தல் டிஜிபி ஜெயந்த் முரளி தெரி­வித்­துள்­ளார்.

"பார்­வதி சிலை கடத்­தப்­ப­டு­வ­தா­கத்­தான் எங்­க­ளுக்குத் தக­வல் கிடைத்­தது. ஆனால், சோதனை நடத்­தி­ய­போது, 11 சிலை­கள் மட்டுமே கிடைத்­தன.

பார்­வதி சிலையை ஒப்­ப­டைத்­தால் மற்ற சிலை­க­ளைக் கொடுத்து­வி­டு­வ­தாக ஜாவித்­ஷா­வி­டம் பேரம் பேசி­னோம். அதை­ய­டுத்து, அதே வீட்­டில் புதைத்து வைத்­தி­ருந்த பார்­வதி சிலையை அவர் எடுத்­துக்­கொ­டுத்­தார்.

"12 சிலை­களும் சுமார் ரூ.40 கோடி மதிப்­புள்­ளவை என கணக்­கிட்­டுள்­ளோம். இந்­தச் சிலை­கள் எந்த கோவி­லில் இருந்து திரு­டப்­பட்­டவை என்­பது பற்றி விசா­ரித்து வரு­கி­றோம்," என்­றார் டிஜிபி ஜெயந்த் முரளி.

கைப்­பற்­றப்­பட்ட சிலை­களில் மிக­வும் அரி­தான ராவ­ணன் சிலை­யும் உள்­ளது. மகா­ராஷ்­டிரா உட்­பட நாட்­டின் ஐந்து மாநி­லங்­களில் மட்­டுமே ராவ­ண­னுக்கு கோவில் உள்ள நிலை­யில், இந்­தச் சிலை எங்­கி­ருந்து திரு­டப்­பட்­டது என்­ப­தைக் கண்­ட­றிய விசா­ரணை தொடங்கி உள்­ளது.

மேலும், இக்­கு­றிப்­பிட்ட சிலை இலங்­கை­யில் இருந்து கடத்­தி­வ­ரப் பட்­டி­ருக்­க­லாம் எனக் கரு­தப்­ப­டு­கிறது.