பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு

பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு

2 mins read
49cbe031-8c45-4daf-a546-1172c7843502
மதுரை பாலமேட்டில் 2019 ஜனவரி 16ஆம் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு காளையை ஒருவர்தான் அடக்கவேண்டும் என்ற விதிமுறையை மீறி ஒன்றுதிரண்டவர்களைக் கண்டு மிரண்டு மிதித்துத்தள்ளி பாயும் காளை. கோப்புப்படம்: ஏஎஃப்பி -

மதுரை: மதுரை மாவட்­டத்­தின் அலங்­கா­நல்­லூர், பால­மேடு, அவ­னி­யா­பு­ரம் ஆகிய இடங்­களில் பொங்­கல் திரு­நா­ளை­யொட்டி நடை­பெ­ற­வுள்ள ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­களுக்கான தேதி­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. ஜன­வரி 14ஆம் தேதி அவ­னி­யா­பு­ரத்­தி­லும், ஜன­வரி 15ல் பால­மேட்­டி­லும், ஜன­வரி 17ஆம் தேதி அலங்­கா­நல்­லூ­ரி­லும் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­கள் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் அங்கு கொரோனா கிரு­மிப்­ப­ர­வல் தீவி­ர­ம­டைந்து வரு­வ­தை­ய­டுத்து ஜல்­லிக்­கட்­டில் வீரர்­களும் பார்­வை­யா­ளர்­களும் தொற்­றுக் கட்­டுப்­பா­டு­களை கடைப்­பி­டிப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில் மதுரை மாவட்­ட காவல்­து­றை­யைச் சேர்ந்த இரண்­டா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் காவல் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.

தமி­ழக அரசு பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளு­டன் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­களை நடத்த அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது. போட்­டி­களை பாது­காப்­பு­டன் நடத்­து­வ­தற்கு வழி­காட்டி விதி­மு­றை­களை வகுத்­துத் தந்­துள்­ளது.

ஜல்­லிக்­கட்­டுப் போட்டி நடை­பெ­றும் இடங்­களில் மரத்­த­டுப்­பு­கள் அமைத்­தல், மாடு­கள் உள்ளே, வெளியே வந்து செல்­லும் இடங்­கள், பார்­வை­யா­ளர்­கள் அம­ரும் இடம், வாடி­வா­சல், அவ­ச­ரக் கால வழி போன்­ற­வற்­றுக்­கான பணி­கள் முழு­வீச்­சில் நடந்து வரு­கின்­றன.

மேலும், போட்டி நடக்­கும் நாளில் மருத்­துவ முகாம்­கள், போட்­டி­யில் பங்­கேற்­போர், பார்­வை­யா­ளர்­க­ளுக்­கான குடி­நீர் மற்­றும் கழிப்­பறை வச­தி­கள் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­க­ளைத் தயார்­செய்­யும் பணி­களும் நடை­பெ­று­கின்­றன.

ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­க­ளைக் காண உள்­ளூர் பார்­வை­யா­ளர்­களுக்கு மட்­டுமே அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் என்று காவல்­துறை கண்­காணிப்­பா­ளர் வீ.பாஸ்­க­ரன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

பார்­வை­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் அடை­யாள அட்டை வழங்­கப்­படும். மேலும், இரண்டு தவணை தடுப்­பூ­சி­கள் போட்­ட­வர்­கள் மட்­டுமே போட்­டி­யைக் காண அனு­மதிக்­கப்­ப­டு­வர் என்­றும் அவர் கூறி­னார். அதே­போல் போட்­டி­யில் பங்­கேற்­கும் காளை­யின் உரி­மை­யா­ளர் மற்­றும் அவ­ரது உத­வி­யா­ளர் என இரண்டு பேருக்கு மட்­டுமே அனு­மதி­ய­ளிக்­கப்­படும்.

விதி­மு­றை­கள் மீறப்­ப­டு­வது தெரிந்­தால் அவர்­க­ளது காளை போட்­டி­யில் கலந்­து­கொள்­ளும் வாய்ப்பை இழந்­து­வி­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மதுரை மாவட்ட ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­களைக் காண்­ப­தற்கு வழக்­க­மாக வெளி­யூ­ரில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் மது­ரைக்கு வண்டி ­கட்­டிக்­கொண்டு வந்­து­விடு­வர். அது­போன்று எது­வும் நிக­ழா­மல் இருக்க, மது­ரைக்­குள் நுழை­யும் இடங்­களில் எல்­லாம் தடுப்­பு­வே­லி­கள் அமைத்து தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்­கப்­படும் என்­றும் அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

மதுரை மாவட்ட நிர்­வா­கம் தனி­யாக இணை­ய­த்தள முக­வ­ரியை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் மாடு­பிடி வீரர்­கள் மற்­றும் மாட்­டின் உரி­மை­யா­ளர்­கள் பதிவு செய்து கொள்ள ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மதுரை மாவட்ட ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­களில் பங்­கேற்க, மதுரை, சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம், விரு­து­நகர் உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­களைச் சேர்ந்த 3,900 மாடு­பிடி வீரர்­களும் 1,600 காளை உரிமையாளர்களும் தங்­கள் பெயர்­களை இணை­யம் மூலம் பதிவு செய்­துள்­ள­னர்.