சிராவயல் மஞ்சுவிரட்டு ஜன.17ஆம் தேதிக்கு மாற்றம்

சிராவயல் மஞ்சுவிரட்டு ஜன.17ஆம் தேதிக்கு மாற்றம்

1 mins read
84dd62a5-7e7b-48f0-a108-e0538993066b
-

திருப்­பத்­தூர்: சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பத்­தூர் அருகே சிரா­வ­ய­லில் ஆண்­டு­தோ­றும் தை மூன்­றாம் நாள் மஞ்­சு­வி­ரட்டு கொண்­டா­டப்­படும். இந்த மஞ்­சு­வி­ரட்­டைக் காண வெளி­யூர்­களில் இருந்து வெளி­நாடு­களில் இருந்­தும் ஆயி­ரக்­கணக்­கா­னோர் கூடு­வர்.

மிக­வும் பிர­ப­ல­மான இந்த சிரா­வ­யல் மஞ்­சு­வி­ரட்டு, கொரோனா தொற்று கார­ண­மாக ஜன­வரி 17ஆம் தேதிக்கு தள்­ளி­வைக்­கப்­பட்டுள்­ளது. அதற்கு மறு­நாள் கண்டுப்­பட்டி மஞ்­சு­வி­ரட்டு நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிரா­வ­ய­லில் ஆண்­டு­தோ­றும் தை மூன்­றாம் நாள் மஞ்­சு­வி­ரட்டு நடத்­தப்­ப­டு­கிறது. இந்த மஞ்சு விரட்­டில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட காளை­கள் பங்­கேற்­கும்.

இந்­நி­லை­யில், ஜன­வரி 16ஆம் தேதி முழு ஊர­டங்­கால் மஞ்­சு­விரட்டு ஜன­வரி 17ஆம் தேதிக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டை­யில் பாரம்­ப­ரிய முறைப்­படி சிரா­வ­ய­லில் மஞ்சு விரட்டு திடல் அமைக்­கும் பணி­யும் நடந்து வரு­கிறது. திடலை சுத்­தம் செய்து தொழு மற்­றும் பாது­காப்பு வேலி அமைத்­தல், பார்­வை­யா­ளர்­கள் அம­ரும் இடத்­தைத் தயார்­செய்­யும் பணி மும்­மு­ர­மாக நடந்து வரு­கிறது.

மஞ்­சு­வி­ரட்டு அன்று பெரி­ய­நாயகி அம்­மன், தேனாட்சி அம்­மன் கோயில்­களில் சிறப்பு வழி­பாடு நடக்­கும். தொடர்ந்து வாண வேடிக்கை, மேள­தா­ளத்­து­டன் மஞ்சு­வி­ரட்டு தொழு­வுக்கு கிராம மக்­கள் செல்­வர்.

தொழு­வில் உள்ள மாடு­க­ளுக்கு வேட்டி, துண்டு அணி­வித்து மரி­யாதை செய்­வர். தொடர்ந்து கோயில் காளை­களை அவிழ்த்து விட்­ட­தும், மற்ற காளை­கள் அவிழ்த்து விடப்­படும்.

சிரா­வ­யல் மஞ்­சு­வி­ரட்­டை­யொட்டி திருப்­பத்­தூர், பிள்­ளை­யார்­பட்டி, தென்­கரை, அதி­க­ரம், கிளா­ம­டம், மரு­தங்­குடி, கும்­மங்­குடி உள்­ளிட்ட பகு­தி­கள் விழாக்­கோ­லம் பூண்­டுள்­ளன.