பானைகளில் கண் கவரும் அழகிய ஓவியம்

பானைகளில் கண் கவரும் அழகிய ஓவியம்

1 mins read
4fdd6e3a-e840-4019-ad9e-0aa5a7819f54
பொங்கல் பண்டிகையில் சீர்வரிசை பானைகளுக்கு பிரதான இடமுண்டு. பாளையங்கோட்டையில், காண்பவர் மனதை கொள்ளைகொள்ளும் வகையில் சீர்வரிசை பானையில் திருவள்ளு வர் ஓவியத்தை நேர்த்தியாக தீட்டும் ஒருவர். படம்: தமிழக ஊடகம் -

திரு­நெல்­வேலி: பொங்­கல் திரு­நாள் சம­யத்­தில் புது­ம­ணத் தம்­ப­தி­ய­ருக்கு பெற்­றோர் வீடு­களில் இருந்து சீர்­வ­ரி­சை­கள் வழங்­கும் பாரம்­ப­ரி­யம் தொடர்ந்து வரு­கிறது.

இந்த சீர்வரிசை பொருள்­களை பெரிய அளவிலான மண்­பா­னை­களில் வைத்து வழங்­கு­கின்­ற­னர். இதற்­கா­கப் பிரத்­யே­க­மாக சீர்­வ­ரிசை பானை­கள் தயார் செய்­யப்­ப­டு­கின்­றன.

இந்­தப் பானை­களில் தெய்­வ உரு­வங்­கள், தலை­வர்­க­ளின் புகைப்­ப­டங்­கள், இயற்கை காட்­சி­கள், திரு­வள்ளு வர் போன்ற தமிழ் புல­வர்­க­ளின் படங்­களை வரைந்து விற்­பனை செய்­யும் வழக்­கம் தொடர்ந்து வரு­கிறது.

இந்த பொங்­கல் பண்­டி­கை­யின் போதும் வண்ண ஓவி­யங்­க­ளு­டன் சீர்­வ­ரிசை பானை­கள் பாளை­யங்­கோட்டை, திரு­நெல்­வேலி பகு­தி­களில் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

பெரிய அள­வி­லான ஒரு சீர்­வ­ரிசை பானை ரூ.1,200க்கும் சிறிய அள­வி­லான பானை­கள் ரூ.200 முதல் ரூ.400 வரை­யி­லும் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

பொங்­கல் திரு­நா­ளுக்கு சென்னை கோயம்­பேடு சந்­தை­யில் கரும்பு, மஞ்­சள், இஞ்­சிக்­கொத்து உள்­ளிட்­ட­வை­யும் விற்­பனை செய்­யப்­பட்­டன. ஆனால், எதிர்­பார்த்த அள­வுக்கு விற்­பனை இல்லை என்று கோயம்­பேடு சிறு, மொத்த வியா­பா­ரி­கள் சங்­கத் தலைவர் எஸ். எஸ். முத்­துக்­கு­மார் கூறி­னார்.