'வாலிபருக்கு தூக்குத்தண்டனை நியாயமானதே'

'வாலிபருக்கு தூக்குத்தண்டனை நியாயமானதே'

1 mins read
8503bc4f-2a49-4959-ae65-2f97cd98be60
-

சென்னை: சிறு­மியைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்து, கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில், 26 வயது வாலிப­ர் ராஜாவுக்கு(படம்) கீழ் நீதிமன்றம் வழங்கிய தூக்­குத்தண்­ட­னை நியாய மானதே என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

"வழக்கை முறை­யாக விசா­ரணை செய்தபின்னரே மகளிர் நீதி­மன்­றம் தூக்­குத் தண்­டனையை தீர்ப்பாக வழங்கி உள்­ளது. அதை மாற்றி தீர்ப்பு வழங்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தூக்­குத் தண்­டனை தீர்ப்பையே இப்போதும் உறுதி செய்கிறோம்," என நீதி­ப­தி­கள் வைத்­தி­ய­நா­தன், ஜெயச்­சந்­தி­ரன் அமர்வு தீர்ப்பின் போது தெரிவித்தனர்.

புதுக்­கோட்டை மாவட்­டம், ஏம்­பல் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர் சாமி­வேல் என்ற­ ராஜா. இவர், கடந்த ஆண்டு ஏம்­பல் பகு­தி­யில் சிறுமி ஒரு­வரை, பாலி­யல் வன்­கொ­டுமை செய்து கொலை செய்­துள்­ளார். இதை­ய­டுத்து, ராஜா கைதானார். இவ்வழக்கை விசா­ரித்த புதுக்­கோட்டை மகளிர் நீதி­மன்­றம், கடந்த 2020 டிசம்­பரில் ராஜா­வுக்கு தூக்­குத் தண்­டனை விதித்து உத்த­ர­விட்­டது.

இந்­நி­லை­யில், தூக்­குத் தண்­டனையை நிறை­வேற்­று­வது குறித்து, புதுக்கோட்டை காவல்­துறை தரப்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தண்டனை சரியானதே என நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.