61 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் முகாம்

61 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் முகாம்

1 mins read
a73d8066-a663-4be8-8a4a-38e4a8fe1689
-

சென்னை: மாநி­லத்­தில் 61 இடங்­களில் 24 மணி நேர­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வசதி ஏற்­படுத்தி தரப்­பட்­டுள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­யுள்­ளார்.

தமிழ்­நாட்­டில் ஒவ்­வொரு நாளும் ஏறக்­கு­றைய ஒரு லட்­சம் பேருக்கு கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் செய்­யப்­ப­டு­வ­தா­க­ தெரி­வித்த அவர், பரி­சோ­தனையைச் செய்­து­கொள்ள பொது­மக்­கள் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை என்­றும் அறி­வு­றுத்­தி­னார்.

சென்னை கிண்டி கிங் பரி­சோ­தனை மையத்­தில் நேற்று நடை­பெற்ற சமத்­து­வப் பொங்­கல் விழா­வில் கலந்­து­கொண்­ட­பின்­னர் செய்­தி­யா­ளர்­களை அமைச்­சர் சந்­தித்­துப் பேசி­னார்.

"தமி­ழ­கத்­தில் 75% சிறார்­களுக்கு அதா­வது, 23 லட்­சத்­திற்­கும் மேலான சிறார்­க­ளுக்கு தடுப்­பூசி ேபாடப்­பட்­டுள்­ளது. மாநி­லம் முழு­வ­தும் 61 இடங்­களில் 24 மணி நேர­மும் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

"கொரோனா தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மூன்று வித­மாகப் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

"கொரோனா பாதிப்பு அதி­கம் உள்­ள­வர்­கள் மட்­டுமே மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். கொரோனா அறி­கு­றி­கள் இருந்­தால் பொது­மக்­கள் பயப்ப­டா­மல் பரி­சோ­தனை செய்து­கொள்­ள­வேண்­டும். பரி­சோ­தனை செய்ய பொது­மக்­கள் அச்­சப்­படக் கூடாது," என்றும் அமைச்சர் கேட்­டுக்­கொண்டுள்ளார்.