சென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்

ஐக்கிய அரபு சிற்றரசுகளின் சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணி ஒருவரிடம் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) சுங்கத்துறை அதிகாரிகள் 1.386 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.60.27 லட்சம்.

ஏர் அரேபியா விமானத்தில் சென்னை வந்திறங்கிய அந்த ஆடவர், 696 கிராம் எடையுடைய தங்கப் பசையை (gold paste) தம்முடைய மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தம்முடைய சட்டையிலும் காற்சட்டையிலும் 690 கிராம் எடையுள்ள தங்கப் பசையையும் அவர் ஒளித்து வைத்திருந்தார்.

தங்கத்தை ஒளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சென்னையில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் மூவரிடம் இருந்து ரூ.55.29 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் செல்லவிருந்த அந்த மூவரிடம் சந்தேகத்தில் பேரில் விசாரணை நடத்தியதில், அவர்கள் வெளிநாட்டு நாணயங்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

29,500 அமெரிக்க டாலர், 115,000 திர்ஹம், 1,840 குவைத் தினார், 2,450 ஓமான் ரியால், 960 பக்ரேன் தினார் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் அதிகாரிகளின் பிடியில் சிக்கின. அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 55.29 லட்சம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!