பொங்கல்: உலகெங்கும் கொண்டாட்டம், மகிழ்ச்சி; அனல்பறந்த அவனியாபுரம்; வீரம், வெற்றி, பரிசு

பொங்கல்: உலகெங்கும் கொண்டாட்டம், மகிழ்ச்சி; அனல்பறந்த அவனியாபுரம்; வீரம், வெற்றி, பரிசு

2 mins read
a5bec9d3-1f23-484b-ab7d-80a5ba82d853
மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடந்த உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டில் வீரம் காட்டிய காளையர்களும் காளையும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி 25 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் எட்டுப்பேர், காளைகளின் உரிமையாளர்கள் 15 பேர் உள்ளிட்ட மொத்தம் 75 பேர் காயமடைந்தனர். பாலமுருகன் என்ற 19 வயது இளைஞர் காளை முட்டி மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: உல­கெங்­கும் வாழும் தமி­ழர்­கள் நேற்று பொங்கல் திரு­நாளைக் கோலா­க­ல­மா­கக் கொண்­டாடி மகிழ்ந்­த­னர்.

கொவிட்-19 சூழ்­நி­லை­யில் பல கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடை­யி­லும் ஊக்­கம் குறை­யா­மல் அந்த நான்கு நாள் விழாவைத் தமி­ழர்­கள் பெரும் உவ­கை­யு­டன் கொண்­டாடி வரு­கிறார்­கள்.

உழவு தொழி­லுக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் சூரி­யன், தண்­ணீர் கால்­ந­டை­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் வித­மா­கக் கொண்­டா­டப்­படும் பொங்­கல் விழா­வில் உற­வு­க­ளைப் பேணு­வது, முதி­யோர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்­து­வது உள்­ளிட்ட உய­ரிய பண்­பு­க­ளை­யும் தமி­ழர்­கள் கடை­ப்பி­டிக்­கி­றார்­கள்.

பல உல­கத் தலை­வர்­கள், இந்­தியப் பிர­த­மர் மோடி, தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் உள்­ளிட்ட பல­ரும் பொங்கல் வாழ்த்து தெரி­வித்து தமி­ழர்­க­ளின் உய­ரிய குண­ந­லன்­களைப் போற்றி புகழ்ந்­துள்­ள­னர்.

நெகி­ழிப் பொருள்­க­ளைப் பயன்­படுத்­து­வ­தைக் குறைத்­து­கொள்­வோம் என்ற முடிவை இந்­தப் பொங்­கல் பண்­டி­கை­யின் உறு­தி­யாக ஏற்­றுக்­கொள்­வோம் என்று தமி­ழக முதல்­வர் தனது செய்­தி­யில் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

தமிழ்­நாட்­டில் பொங்­கல் பண்­டி­கை­யை­யொட்டி ஜல்­லிக்­கட்டு போன்ற வீர விளை­யாட்­டு­கள் நடை­பெ­று­வது தொன்­று­தொட்டு வழக்க­மாக இருந்து வரு­கிறது.

அதை­யொட்டி மதுரை அவ­னி­யா­பு­ரம், பால­மேடு, அலங்­கா­நல்­லூர் ஆகிய ஊர்­களில் உல­கப் புகழ்­பெற்ற ஜல்­லிக்­கட்டுப் போட்­டி­கள் நடக்­கின்­றன. அவ­னி­யா­பு­ரத்­தில் ஜல்­லிக்­கட்டு நேற்று வெகு­ விமரிசை­யாக நடந்தது.

பால­மேட்­டில் இன்­றும் அலங்கா­நல்­லூ­ரில் நாளை­யும் அந்­தப் போட்டி இடம்­பெ­று­கிறது. முதல் ஜல்­லிக்­கட்டு புதுக்­கோட்டை மாவட்­டம் கந்­தர்­வக்­கோட்டை அருகே தச்­சன்­கு­றிச்­சி­யில் புதன்­கி­ழமை நடந்­தது. கொவிட்-19 கட்­டுப்­பாட்டு­டன் அவ­னி­யா­பு­ரத்­தில் நடந்த போட்­டி­யில் 300 வீரர்களோடு 700 காளை­களும் பங்­கெ­டுத்­தன.

மாடு­பிடி வீரர்­க­ளுக்­கும் காளை உரி­மை­யா­ளர்­க­ளுக்­கும் உத­வி­யா­ளர்­க­ளுக்­கும் கொரோனா தொற்று இல்­லாத சான்­றி­தழ் கட்­டா­யம் பெறப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­பட்­டது. போட்டி தொடங்­கும் முன்­பா­கவே அனை­வ­ருக்­கும் காய்ச்­சல் பரி­சோ­தனை செய்த பின்­னரே களத்­திற்­குள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக 150 பார்­வை­யா­ளர்­கள் மட்­டுமே அனு­மதிக்­கப்­பட்­ட­னர். காளை முட்டி ஒருவர் மாண்டதாகவும் சுமார் 75 பேர் காய­ம­டைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

போட்­டி­யில் சிறப்­பா­கச் செயல்­பட்ட காளைக்கு முதல்­வர் சார்­பில் ஒரு கார் பரி­சாக வழங்­கப்­பட்­டது. சிறந்த மாடு­பிடி வீர­ருக்குச் சேப்­பாக்­கம் தொகுதி எம்­எல்ஏ உத­ய­நிதி சார்­பில் மோட்­டார் சைக்­கிள் கொடுக்­கப்­பட்­டது.

அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். வலையங் குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி 2வது பரிசை பெற்றார். இதர ஏரா­ள­மான பரி­சு­களை வீரர்­களுடன் காளை­களும் பெற்­றுச் சென்­றன.