திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொவிட்-19 பரவல் ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே பலருக்கு நச்சுக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவோர் கூட்டம் அதிகம் உள்ளதாகத் தகவல்கள் கூறின.
புதுவிதமான இந்தக் காய்ச்சல் கண்டவர்களுக்குத் தொண்டையில் வலி, மூக்கு ஒழுகுதல், வாந்தி, அதிக மூட்டு வலி ஏற்படுகிறது.
காய்ச்சல் தொற்று நோய்ப் போல் பரவுகிறது என்பதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
முகக்கவசம் அணிதல், அரசு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால் பாதிப்பிலிருந்து தப்பலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

