சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் ஓமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக, விமானச் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, மதுரை, தூத்துக்குடி, கோவை, ஹைதராபாத், கோல்கத்தா உள்ளிட்ட நகர்களுக்கு சனிக்கிழமை (ஜனவரி 15) 90 விமானங்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 6,408 பேர் பயணம் செய்தனர்.

அதேபோல, பிற நகர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட 93 விமானங்களில் 5,988 பேர் பயணம் செய்தனர். ஒட்டுமொத்தம் 183 விமானங்களில் 12,396 பேர் மட்டுமே பயணம் செய்ததாக மாலை மலர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒப்புநோக்க, கொரோனா முதலிரு தொற்று அலைகளுக்குப் பிறகு சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு கடந்த ஒரு மாதகாலமாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 270 விமானங்கள் வந்து சென்றன. அவற்றில் ஏறக்குறைய 30,000 பேர் பயணம் செய்து வந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!