65 கிலோ இளவட்டக் கல்லை அநாயாசமாகத் தூக்கி அசத்திய திருமணமான பெண்

65 கிலோ இளவட்டக் கல்லை அநாயாசமாகத் தூக்கி அசத்திய திருமணமான பெண்

1 mins read
63430016-e805-4dfe-a972-63cb98d9bc4e
65 கிலோ இளவட்டக்கல்லைத் தூக்கி அசத்திய ராஜகுமாரி.படம்: தமிழக ஊடகம் -

திரு­நெல்­வேலி: திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் உள்ள வடலி விளை கிரா­மத்­தில் மாட்­டுப் பொங்­கலை ஒட்டி விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடத்­தப்­பட்­டன. அவற்­றுள் ஒன்­றாக, தமி­ழர்­க­ளின் வீரத்­தின் அடை­யா­ள­மா­கக் கரு­தப்­படும் இள­வட்­டக்­கல் தூக்­கும் போட்­டி­களும் நடை­பெற்­றன.

இப்­போட்­டி­யில், பதின்ம வயது இளை­யர்­கள், திரு­ம­ண­மான ஆண்­கள்-பெண்­கள் பங்­கேற்று தங்­க­ளது பலத்தை நிரூ­பித்­துக் காட்­டி­னர்.

50 கிலோ உரலை ஒரு கையில் அதிக நேரம் பிடித்த இளை­ஞர் அஜய், 21, முதல் பரி­சும் பால­கி­ருஷ்­ணன் 2ஆம் பரி­சும் பெற்­ற­னர்.

65 கிலோ இள­வட்­டக் கல்லை அநா­ய­ாச­மாகத் தூக்கி 10 முறை கழுத்தைச் சுற்றி அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­திய மண­மான பெண் ராஜ­கு­மாரி, 35, முதல் பரி­சும் பத்மா 4 முறை சுற்றி இரண்­டாம் பரி­சும் பெற்­ற­னர்.

129 கிலோ எடை­யுள்ள இள­வட்­டக் கல்லை 4வது முறை­யாக தங்­க­ராஜ் என்­ப­வர் மட்­டுமே தூக்கி முதல் பரிசை வென்­றார்.

கைக்கு அகப்­ப­டாத மிகப்­பெ­ரிய கல்லை கட்டி அணைத்து, தன் முழு வலி­மை­யை­யும் அந்­தக் கல்­லின் மீது செலுத்தி மெல்ல மெல்ல மேலே நெஞ்­சின் மேற்­ப­ரப்பு வரை தூக்கி பின்பு தோள்­பட்­டை­யின் வழியே கழுத்­தைச் சுற்றி கீழே போடும் முறையே, இள­வட்­டக் கல்லைத் தூக்கி வெற்றிபெற்­ற­தாக அறி­விக்­கப்­ப­டு­கிறது.