ஆள்மாறாட்டம் செய்த இருவர் வெளியேற்றம்; விசாரணை

ஆள்மாறாட்டம் செய்த இருவர் வெளியேற்றம்; விசாரணை

1 mins read
2424d74a-8aef-44eb-873b-34d1f3931542
வேெறாருவர் பெயரில் போட்டியில் கலந்து கொண்டு, காளைகளை அடக்கி போட்டியில் இருந்து வெளி யேற்றப்பட்ட ராமச்சந்திரன், தமிழரசன். படம்:தமிழக ஊடகம் -

மதுரை: மதுரை மாவட்­டம், பால­மேட்­டில் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் இரண்டு, மூன்­றாம் நிலை­களில் இரு இளை­யர்­கள் காளை­களை அடக்­கிக்கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, அவர்­கள் ஆள் மாறாட்­டம் செய்து, முறை­கே­டாக விளை­யா­டு­வ­து தெரியவந்தது.

இதையடுத்து, இரு­வ­ரை­யும் வரு­வாய்த் துறை அதி­கா­ரி­கள் போட்­டி­யில் இருந்து வெளி­யேற்றி, காவல்­து­றை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைத்த னர். விசா­ர­ணை­யில் இளையர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

ராமச்­சந்­தி­ரன் என்ற இளை­ஞர், 17 என்ற எண் கொண்ட கார்த்தி என்­ப­வ­ரின் சீரு­டையை அணிந்து எட்டு காளை­க­ளை அடக்கி இரண்­டா­வது இடத்­தில் இருந்­த­தும் தமி­ழ­ர­சன் என்ற இளை­ஞர், சக்­க­ர­வர்த்தி என்­ப­வ­ருக்குப் பதிலாக போட்டியில் பங்கேற்று ஆறு காளை­களை அடக்கி, மூன்­றா­வது இடத்­தில் இருந்­த­தும் ெதரியவந்தது.