கரூர்: கரூரில் நீதிமன்ற உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக சேவல் சண்டை போட்டியை நடத்திய நால்வர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களது 10 இரு சக்கர வாகனங்களையும் ஓர் உயி ரிழந்த சேவல், இரு உயிருள்ள சேவல்களையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.
கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் ஒருவரையும் வாங்கல் அருகேயுள்ள சின்னகாளி பாளையத்தில் மூவரையும் சேவல் சண்டை நடத்தியது தொடர்பில் பசுபதிபாளையம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

