அரசு சார்பில் எம்ஜிஆருக்கு மரியாதை

அரசு சார்பில் எம்ஜிஆருக்கு மரியாதை

1 mins read
02eda01c-7348-4580-810a-87d1ccf1110d
-

சென்னை: தமி­ழக மக்­க­ளால் மக்­கள் தில­கம் என்­றும் புரட்­சித் தலை­வர் என்­றும் அன்­பு­டன் அழைக்­கப்­படும் மறைந்த முன்­னாள் முதல்­வர் எம்.ஜி.ராமச்­சந்­தி­ர­னின் 105வது பிறந்­த­நாள் விழா இன்று 17ஆம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளது.

இவ்­விழா மாநில அர­சின் சார்­பில் கொண்­டா­டப்­பட்டு, எம்­ஜி­ஆரின் சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தப்படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், முன்­னாள் முதல்­வர் 'பாரத ரத்னா' டாக்­டர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்­த­நாள் விழாவை முன்­னிட்டு, இன்று காலை 10 மணி­ய­ள­வில் சென்னை, கிண்­டி­யில் உள்ள டாக்­டர் எம்.ஜி.ஆர். மருத்­து­வப்­பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் அமைந்­துள்ள அவ­ரது திருஉரு­வச்­சி­லைக்கு அர­சின் சார்­பில் அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், அரசு உயர் அலு­வ­லர்­கள் ஆகி­யோர் பங்­கேற்று மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­து­வர் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, எம்­ஜி­ஆர், ஜெய­ல­லி­தா­வைப் போல் பொற்­கால ஆட்­சியை விரை­வில் தமி­ழ­கத்­தில் நிலை­நாட்ட சப­தம் எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்று அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பழ­னி­சாமி ஆகி­யோர் வேண்டுகோள் விடுத்­துள்­ள­னர். ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கும் ஒரு குடும்ப ஆட்­சியை அடி­யோடு வேர­றுக்க அனை­வரும் போர்ப்­ப­ரணி பாடவேண்­டிய நேரம் இது என்­றும் அதிமுக தலைவர்கள் தொண்­டர்­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ள­னர்.